பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது ஜெயந்தி மற்றும் 61ஆவது குருபூஜையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர், “மதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புனித குருபூஜையை முன்னிட்டு அவருக்கு நமது அஞ்சலியை செலுத்துகிறோம்.
சமூக மேம்பாட்டில் ஆழமாக வேரூன்றி இருந்த அவரது அரும் பணிகள், விவசாயிகளின் செழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்திய அவரது ஆன்மீகப் பாதை, தேசத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒளியேற்றுகிறது.
காலத்தால் அழியாத அவரது கொள்கைகள் எதிர்கால தலைமுறையினருக்கான உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக திகழும்” எனத் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் தேவரின் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு கோவா மாநில முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த், பசும்பொன் சென்று நேரடியாக தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“