/tamil-ie/media/media_files/uploads/2022/12/manish-tiwari759.jpg)
காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் சுயாட்சி குறித்து வளர்ந்து வரும் கவலைகளை என்பதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, மக்களவையில் தனிநபர் உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தார்.
இது பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவை அமைக்கக் கோருகிறது. அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கியுள்ளனர்.
தற்செயலாக, பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் உள் தேர்தல்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் உள் செயல்பாட்டை "ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் மற்றும் மேற்பார்வையிடவும்" தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரத்தை இந்த மசோதா கோருகிறது.
ஜூன் மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு கட்டுரையில், திவாரி இதையே வாதிட்டார்.
இந்த மசோதா, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு ஆறு ஆண்டுகளும், பிராந்திய ஆணையர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளும் நிலையான பதவிக் காலத்தை வழங்குகிறது.
“உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு வகுக்கப்பட்ட நடைமுறையின்படி தவிர, அவர்களை பதவியில் இருந்து நீக்கக் கூடாது. மேலும், ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு அலுவலகத்திற்கும் மறு நியமனம் செய்யத் தகுதியற்றவர்களாக இருக்கக் கூடாது” என்று மசோதா கூறுகிறது.
இந்த மசோதா இந்திய தேர்தல் ஆணையத்திற்கு "அனைத்து அரசியல் கட்சிகளின் உள் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தவும், கண்காணிக்கவும் மற்றும் மேற்பார்வையிடவும் தேவையானவற்றை" வழங்க முயல்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.