Advertisment

மாநிலம் முழுவதும் 15 கொலைகள், வெளிநாட்டில் பரவியுள்ள 56 காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள்: பஞ்சாப் காவல்துறை

இந்த காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளில் சில, இந்தியாவை தளமாகக் கொண்ட கும்பல்களின் உதவியுடன், 2017 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை பஞ்சாபில் "15 கொலைகளை" நடத்தியதாக பஞ்சாப் காவல்துறை கூறியது.

author-image
WebDesk
New Update
Pro-Khalistan outfits

Pro-Khalistan outfits abroad total 56, behind 15 killings across state

மொத்தம் 56 காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள்(PKEs) அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளன, அவற்றில் சில கடந்த ஆறு ஆண்டுகளில் பஞ்சாபில் நடந்த 15 கொலைகளுக்கு காரணமானவை என்று பஞ்சாப் காவல்துறை உள்துறை அமைச்சகத்திடம் (MHA) தெரிவித்ததாக அறியப்படுகிறது.

Advertisment

கடந்த வாரம் தேசிய புலனாய்வு முகமை (NIA) ஏற்பாடு செய்த இரண்டு நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (உள் பாதுகாப்பு) நிலாப் கிஷோர் அளித்த விளக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டது.

பஞ்சாப் காவல்துறை வழங்கிய தரவுகளை மேற்கோள் காட்டி, 56 காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளில் அமெரிக்காவில் 13, கனடாவில் 12, ஜெர்மனியில் 7, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானில் 6, பிலிப்பைன்ஸ், ஆர்மீனியா, போர்ச்சுகல் மற்றும் மலேசியாவில் தலா 2 மற்றும் நான்கு வெவ்வேறு நாடுகளில் உள்ளன.

இந்த காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளில் சில, இந்தியாவை தளமாகக் கொண்ட கும்பல்களின் உதவியுடன், 2017 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 30 வரை பஞ்சாபில் "15 கொலைகளை" நடத்தியதாக பஞ்சாப் காவல்துறை கூறியது. இதில் மே 2022 இல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை, "மூன்று கையெறி குண்டு தாக்குதல்கள், இரண்டு RPG தாக்குதல்கள் மற்றும் இரண்டு IED குண்டுவெடிப்புகள்" அடங்கும்.

காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கும்பல்களுக்கு இடையிலான உறவுகளை சுட்டிக்காட்டிபஞ்சாப் காவல்துறை, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட கேங்ஸ்டர் ஹர்விந்தர் சிங் சந்து என்ற ரிண்டாவுக்கு, சிறையில் உள்ள கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோருடன் தொடர்பு இருப்பதாக கூறியது.

ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் (KTF) தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், டேவிந்தர் பாம்பிஹா கும்பல் மற்றும் கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதி அர்ஷ்தீப் டல்லாவுடன் தொடர்பு கொண்டிருந்தார்;

காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னு மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட காலிஸ்தான் பிரிவினைவாதி லக்பீர் சிங் ரோட் ஆகியோருடன் அர்ஷ்தீப் டல்லாவுக்கும் தொடர்பு உள்ளது.

கனடாவை தளமாகக் கொண்ட கேங்ஸ்டர் லக்பீர் சிங் சந்து அலியாஸ் லாண்டா- ரோட் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான பாபர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) தலைவர் வாதாவா சிங் பாபருடன் தொடர்பைக் கொண்டுள்ளார்; ஜெர்மனியை தளமாகக் கொண்ட காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் முக்கிய உறுப்பினர் குர்மீத் சிங் பக்கா பாகிஸ்தானைச் சேர்ந்த கேங்ஸ்டர் ஹாரி சாத்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளார்; மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பரம்ஜித் சிங்- சிறையில் உள்ள குண்டர் ஜக்கு பகவான்பூரியாவுடன் கூட்டணி வைத்துள்ளார்என்று பஞ்சாப் காவல்துறையின் விளக்கத்தை மேற்கோள் காட்டி ஆதாரங்கள் தெரிவித்தன.

காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை பட்டியலிட்ட பஞ்சாப் காவல்துறை, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் 130 எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளதாகவும், 580 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குண்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 4,597 பேரை கைது செய்துள்ளதாகவும், என்கவுன்டர்களில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட கும்பல்களில் ஹரியானாவைச் சேர்ந்த 16 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா 4 பேர், ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் மற்றும் பிற இடங்களைச் சேர்ந்த 9 பேர் அடங்குவர்.

பஞ்சாப் காவல்துறையின் முன்மொழிவின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் 11 நபர்களை பயங்கரவாதிகளாகவும், மூன்று அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகவும் அறிவித்ததாக ஐஜிபி கிஷோர் கூறினார். இது தொடர்பாக மேலும் ஆறு முன்மொழிவுகளை முன்வைத்துள்ளோம் என்றார்.

இதுதவிர, காலிஸ்தான் ஆதரவாளர்கள் 11 பேர் நாடு கடத்தப்பட்டனர், 13 நபர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ், உபா சட்டத்தின் கீழ் நான்கு பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 40 பேரின் கீழ் ரெட் கார்னர் நோட்டீஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் அனைத்து மாநில போலீஸ் படைகளின் தலைவர்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஐந்து தலைப்புகள் தனித்தனி அமர்வுகளில் விவாதிக்கப்பட்டன; காலிஸ்தான் பிரச்சினை "பயங்கரவாத சூழலை தகர்த்தல்" என்ற அமர்வின் ஒரு பகுதியாக அமைந்தது.

Read in English: Punjab Police to MHA: Pro-Khalistan outfits abroad total 56, behind 15 killings across state

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment