Advertisment

டெலிகிராமில் பாலியல் தொழில்:  பெங்களூருவில் துருக்கி பெண் உட்பட 8 பேர் கைது

முக்கிய குற்றவாளியான பயோன்யாஸ், துருக்கியை பூர்வீகமாக கொண்டவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்ததாக பெங்களூரு போலீசார் தெரிவித்தனர். இவர் கணவர் இறந்த பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.

author-image
WebDesk
New Update
prostitution racket 1

பயோன்யாஸ் சுவாமி கவுடா. (புகைப்பட உதவி: பெங்களூரு சிட்டி போலீஸ்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெலிகிராம் மற்றும் பிற மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி பாலியல் தொழில் நடத்திய துருக்கி பெண் உட்பட 9 பேரை ரகசிய நடவடிக்கையில் பெங்களூரு நகர போலீசார் கைது செய்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Turkish woman, 8 others held in Bengaluru for ‘running prostitution racket’ using Telegram

கைது செய்யப்பட்ட நபர்கள் குக் நகரில் வசிக்கும் பயோனியாஸ் சுவாமி கவுடா (40) நந்தினி லேஅவுட்டில் வசிப்பவர் அக்ஷய் ஜே (32), பரப்பன அக்ரஹாரா பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (34), லாகரேவில் வசிக்கும் வைஷாக் வி சட்லூர் (22), பிரகாஷ் கே (32), மகாலட்சுமி லேஅவுட்டில், ஒடிசாவை சேர்ந்தவர்கள் மனோஜ் தாஸ் (23), மற்றும் பிரமோத் குமார், (31), பீனியாவில் வசிக்கும் ஜிதேந்திர சாஹூ (43) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நகர காவல் ஆணையர் பி தயானந்தா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 5 வெளிநாட்டவர்கள் உட்பட 7 பெண்களை பயன்படுத்தி இந்த மோசடியை நடத்தியுள்ளனர். துருக்கியை பூர்வீகமாகக் கொண்ட பயோனியாஸ் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்துள்ளார். இவர் குறைந்தது எட்டு முதல் 10 ஆண்டுகளாக சட்டவிரோதமாக பாலியல் தொழிலின் ஒரு பகுதியாக இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரான ரோஹித் சுவாமி கவுடாவை, துருக்கியில் சந்தித்த பயோன்யாஸ் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். ஆனால், ரோஹித் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பின்னர், பயோன்யாஸ் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ரகசிய தகவலின் பேரில் அல்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். “பெங்களூரு டேட்டிங் கிளப் என்ற பெயரில் ஒரு சேனலை வைத்துள்ள டெலிகிராமில் பாலியல் தொழில் நடத்தப்படுவதை நாங்கள் அறிந்தோம். அதில், பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்தனர். இது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தவர்களில் ஒருவர் வாடிக்கையாளர் போல மாறுவேடத்தில் சென்று பிடித்தார். டோம்லூரில் உள்ள லீலா பார்க் ஹோட்டலில் ஒரு அறையில் இருந்தபோது இந்த கும்பலைப் பிடித்தோம்,” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ், துருக்கி மற்றும் பிற நாடுகளில் இருந்து இந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை அழைத்து வந்ததாக அதிகாரிகள் கண்டறிந்தனர். பயோன்யாஸ் தனது 9 வயது மகளுடன் குக் நகரில் வசிக்கிறார். இத்தனை ஆண்டுகளில் அவர் போலீஸ் கண்காணிப்பு வளையத்தின் கீழ் வருவது இதுவே முதல் முறை என்று போலீசார் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment