/indian-express-tamil/media/media_files/2025/05/04/uZi6035cVgUFRoFRj2uJ.jpg)
புதிதாக கழிப்பிட வசதி செய்தி தர வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் நெல்லி தோப்பு மீன் மார்க்கெட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி கே.சி நகர் பகுதியில் கழிப்பிட வசதி செய்து கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெல்லி தோப்பு சிக்னல் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட கே சி நகர் பகுதியில் பொது கழிப்பிடம் ஒரு வருட காலமாக பராமரிப்பின்றி பூட்டு போடப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்பு உள்ளாகியுள்ளனர். புதிதாக கழிப்பிட வசதி செய்தி தர வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் நெல்லி தோப்பு மீன் மார்க்கெட் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாங்கள் உடனே நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.