நாட்டில் மொத்தம் உள்ள 22 பொதுத்துறை வங்கிகளை, இணைப்பின் மூலம் 12 ஆக குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம், வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
இணைக்கப்படும் வங்கிகள்
*பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைடட் வங்கி இணைக்கப்படும்.இதன் மூலம் நாட்டில் 2வது பொதுத்துறை வங்கியாக செயல்படும்.
*கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி இணைக்கப்படும்
*யூனியன் வங்கி , ஆந்திரா வங்கி, கார்பரேசன் வங்கி இணைக்கப்படும்
*இந்தியன் வங்கி - அலகாபாத் வங்கிகள் இணைக்கப்படும்
*10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளாக இணைந்து செயல்படும்
*பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 27 ல் இருந்து 12 ஆக குறைக்கப்படுகிறது.
*7 வங்கிகளில் தான் 82 சதவீத வர்த்தக பணிகள் நடந்து வருகின்றன.