அரசியல் ஆதாயம் தேடி மக்களுக்கு தொல்லை: இந்தியா கூட்டணி போராட்டம் குறித்து புதுச்சேரி அ.தி.மு.க விமர்சனம்!

நம் நாட்டின் சுற்றுலா பயணிகள் மரணமடைந்த 16-ம் நாளில் அதற்கு காரணமானவர்களுக்கு மரணம் என்கிற தண்டனையை நம் ராணுவம் அளித்துள்ளது பொருத்தமான ஒன்றாகும்.

நம் நாட்டின் சுற்றுலா பயணிகள் மரணமடைந்த 16-ம் நாளில் அதற்கு காரணமானவர்களுக்கு மரணம் என்கிற தண்டனையை நம் ராணுவம் அளித்துள்ளது பொருத்தமான ஒன்றாகும்.

author-image
WebDesk
New Update
Puducherry Admk Anbazhagan

புதுச்சேரியில் அற்ப அரசியல் ஆதாயத்திற்காக மக்களுக்கு தொல்லை கொடுக்கும் விதத்தில் பந்த் போராட்டத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்ததை வாபஸ் பெற வேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

Advertisment

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, சரியான பதிலடி வழங்கப்பட்டதின் மூலம் தேசப்பற்று மிக்க தலைமையை பிரதமர் மோடி அரசு பெற்றுள்ளது. நம் நாட்டில் மரணம் அடைந்த ஒருவருக்கு 16-ம் நாள் துக்க காரியம் செய்வார்கள். நம் நாட்டின் சுற்றுலா பயணிகள் மரணமடைந்த 16-ம் நாளில் அதற்கு காரணமானவர்களுக்கு மரணம் என்கிற தண்டனையை நம் ராணுவம் அளித்துள்ளது பொருத்தமான ஒன்றாகும்.

திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி என்பது கொள்கையற்ற சந்தர்பவாத கூட்டணியாகும். தமிழகத்தில் ஆளுநர் மீது நம்பிக்கை இல்லாமல் பல்வேறு விஷயங்களுக்கு இந்தியா கூட்டணியின் தமிழக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்திற்கு செல்கின்றார். ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவர்கள் துணைநிலை ஆளுநரிடம் ஆளும் அரசின் முறைகேடுகள், ஊழல்கள் சம்பந்தமாக மனு அளித்துள்ளனர். மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் என்பவர் நேர்மையான நடுநிலையுடன் செயல்படுகிறார் என்பதை புதுச்சேரியை சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சிகள் அங்கீகரித்துள்ளன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் வரும் 20-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக ஆட்சி நடத்தும் தமிழகத்திலும் இந்த கூட்டணி கட்சிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. ஆனால் புதுச்சேரியில் அற்ப அரசியல் ஆதாயத்திற்காக மக்களுக்கு தொல்லை கொடுக்கும் விதத்தில் பந்த் போராட்டத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. நாடு இன்று போர்க்களம் கண்டுள்ளது.

Advertisment
Advertisements

பாகிஸ்தான் துணையுடன் நம் நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதிகளை ஒடுக்கும் தர்மயுத்தத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. நம் நாடு அந்நிய நாட்டுடன் போர் தொடுத்துள்ள இந்த சூழ்நிலையில் ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடிய பந்த் போராட்டம் அவசியமானதா? எனஙே இந்த பந்த் போராட்டத்தை அறிவித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பந்த் போராட்ட அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வர்த்தக, வியாபார, சிறிய, பெரிய கடை நிறுவனங்கள் முழுமையான வியாபாரம் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.  இந்நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள பந்த் போராட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கும் விஷயமாகும். எனவே இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரியில் அறிவித்துள்ள மக்கள் விரோத இந்த பந்த் போரர்ட்டத்தை அவர்கள் திரும்ப பெற வேண்டும்.

காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் திரு.வைத்திலிங்கம் அவர்களுக்கு இந்த அளவிற்கு பெருந்தன்மை இருக்க கூடாது. திமுக அமைப்பாளர் திரு.சிவா அவர்கள் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு காலி டப்பா, ஓட்ட தள்ளு வண்டி, காயிலான்கடையில் வீசக்கூடிய பழுதடைந்த வண்டியாக காங்கிரஸ் உள்ளது. இவர்களை வரும் தேர்தலில் நாங்கள் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல பொது இடங்களில் காங்கிரஸ் பற்றிய உண்மை நிலையை திமுக உணர்த்தியிருந்தது.

அதற்கு பலமுறை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், வைத்திலிங்கமும் திமுகவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர். தற்போது தேசிய நலன் மிக்க பாஜக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் அவர்கள் தள்ளுவண்டி, ஓட்ட வண்டி என திமுக யாரை சொன்னார்கள் என்று தெரியவில்லை என பேட்டியளித்துள்ளார். இது பயத்தின் வெளிப்பாடா அல்லது அவருடைய சந்தரப்பவாத பெருந்தன்மையா என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியின்போது மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி, குமுதன்,மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி,மாநில எம்.ஜி. ஆர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி, மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன், தொகுதி கழக செயலாளர்கள் கமல்தாஸ், சம்பத், குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Puduchery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: