/indian-express-tamil/media/media_files/2024/11/04/yhJfbRVoH7mYhY5RUSos.jpg)
தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை பயிற்சி பணி செய்யும் மாணவர்களுக்கு அரசு அறிவித்த உதவி தொகையை வழங்காமல் ஏமாற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்
புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ பயிற்சி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. அதன்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில மருத்துவ கல்லூரிகளில் அது வழங்கப்படுவதில்லை.
இது தொடர்பாக, இளநிலை மருத்துவ பயிற்சி மாணவர்களுடன் சென்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து, தனியார் கல்லூரிகளில் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், இளநிலை மருத்துவ பயிற்சி மாணவர்களுக்கு அரசு அறிவித்த உதவித்தொகையை வழங்காமல்,தனியார் மருத்துவக் கல்லூரிகளான ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூயில் மாதம் ரூ.5000-மும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூாயில் மாதம் ரூ.10 ஆயிரமும் உதவித் தொகையாக குறைத்து வழங்குகின்றன.
அதேபோன்று பல்வேறு நிகர் நிலைப் பல்கலைக் கழங்கங்கள் மருத்துவ பயிற்சி பணி செய்யும் மாணவர்களுக்கு வெறும் ரூ.2500 மட்டும் நாளொன்றுக்கு ரூ.85 வீதம் வழங்கி மாணவர்களை ஏமாற்றுகின்றனர். எனவே, அரசு உத்தரவை மதிக்காத தனியார் கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக அரசு அறிவித்த உதவி தொகை வழங்க தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.