இ.பி.எஸ். குறித்த அவதூறு கார்ட்டூன்; தி.மு.க வலைதள பக்கத்தை முடக்க கோரி புதுச்சேரி அ.தி.மு.க புகார்!

எடப்பாடி கே.பழனிச்சாமி திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவினர்` அவதூறாக சித்தரித்து அரை நிர்வாணமாக கார்டூன் படம் வரைந்து மிகவும் மோசமான வகையில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

எடப்பாடி கே.பழனிச்சாமி திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவினர்` அவதூறாக சித்தரித்து அரை நிர்வாணமாக கார்டூன் படம் வரைந்து மிகவும் மோசமான வகையில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Puducherry Admk

எடப்பாடி பழனிச்சாமி குறித்த அவதூறு கார்டூன் புகைப்படத்தை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை முடக்கம் செய்ய தாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக  கோரிக்கை வைத்துள்ளது

Advertisment

புதுச்சேரி மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் புதுச்சேரி மாநில தலைமை காவல்துறை துணைத் தலைவர் அவர்களிடம் மனு அளித்தார். அந்த மனுவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி கே.பழனிச்சாமி திராவிட முன்னேற்ற கழக தகவல் தொழில்நுட்ப பிரிவினர்`கடந்த 17-06-2025 அன்று மாலை சுமார் 5.57 மணியளவில் அவதூறாக சித்தரித்து அரை நிர்வாணமாக கார்டூன் படம் வரைந்து மிகவும் மோசமான வகையில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இச்செயலை திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக உள்ள தமிழக அமைச்சர் .டி.ஆர்.பி.ராஜா  செய்துள்ளார். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக விஷமிகளால் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த அவதூறு கார்ட்டூனை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் திமுகவை சேர்ந்த சில விஷமிகள் இதை திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கழகத்தில் உள்ள சுமார் ஒன்றரை கோடி தொண்டர்களால் கழக பொதுச்செயலாளராக இதய பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள எடப்பாடியார் அவர்களை தவறாக விமர்சனம் செய்துள்ள இச்செயல் தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது.

Advertisment
Advertisements

தமிழக அமைச்சராக உள்ள டி.ஆர்.பி.ராஜா அவர்கள் அரசியல் நாகரீகம் இன்றி இந்த இழிவான செயலில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் அவர் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு செயலாளராக இருப்பதால் இந்த செயலுக்கு அவரே முழுப்பொறுப்பு என்கிற அடிப்படையில் அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் சமூக வலைதளங்களில் இருந்து அந்த அவதூறு கார்டூன் புகைப்படத்தை நீக்கம் செய்ய வேண்டும். மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை முடக்கம் செய்ய தாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறை துணைத் தலைவர் அவர்கள் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்நிகழ்வின் போது புதுச்சேரி மாநில கழக பொருளாளர். ரவிபாண்டுரங்கன், மாநில கழக துணைச் செயலாளர் நாகமணி, மாநில கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுதர்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: