புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் எப்போது? சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் 2025 மார்ச் 10 ஆம் தேதி லெப்டினன்ட் கவர்னரின் வழக்கமான உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் ஆர்.செல்வம் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry Assembly Budget session to commence on March 10 Speaker R Selvam Tamil News

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் 2025 மார்ச் 10 ஆம் தேதி லெப்டினன்ட் கவர்னரின் வழக்கமான உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் ஆர்.செல்வம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி 15-வது சட்டமன்ற கூட்டத்தொடர்  மார்ச் மாதம் 10-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 09:30 மணிக்கு கவர்னர் உரை உரையுடன் கூடுகிறது என இன்று செய்தியாளர்களிடம் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

Advertisment

இது குறித்து இன்று சட்டமன்றத்தில் சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் சட்டசபை மார்ச் மாதம் 10 ஆம் தேதி  கூடுகிறது. புதுவை சட்டசபை கூட்டம் கடந்த 17-ந்தேதி நடந்தது. கூட்டத்தில் அரசின் 2024- 25ம் நிதியாண்டின் கூடுதல் செலவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரானது கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். எனவே, கவர்னர் கைலாஷ் நாதனிடம் நேரம் கேட்டு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக, மார்ச் 10 தேதி சட்டசபையை கூட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. 

Advertisment
Advertisements

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய சபாநாயகர் செல்வம், சமீபத்தில் சபாநாயகர் டெபாசிட் இழப்பார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவரது சொந்த ஊரான மணவெளி தொகுதியில் போட்டியிட தயாரா என சபாநாயகர் செல்வம் சவால் விடுத்துள்ளார், அப்படி போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார் என்றும் அவர் கூறினார்.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: