புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் பயன்படுத்தாத சட்டப்பேரவையாக மாற்ற மத்திய அரசு எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது முழுமையாக இன்று செயல்படுத்தப்பட்டது. இதனை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் காகிதத்தை பயன்படுத்தாத சட்டப்பேரவையாக மாற்ற வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் செல்வம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி மத்திய அரசு நேவா (NeVA) என்ற திட்டத்திற்கு மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் (Ministry of Parliamentary Affairs) முழு அதிகாரம் அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/6afd96ae-e23.jpg)
அதன்படி, ஒரு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் ஒப்புதல் 2022 ஆம் ஆண்டு பெறப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் (System Integrator) கொல்கத்தாவை சேர்ந்த, நிம்பஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் (Nimbus System Private Ltd.) என்ற நிறுவனம் ஜூலை 2024 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 8.16 கோடிக்கு பணி ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சட்டப்பேரவை வளாகத்தில் மின்னணு உள்கட்டமைப்பு பணிகள் முழுவதுமாக செய்யப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது. அந்த சோதனை தற்போது சக்சஸ் ஆகி உள்ளது. பணிகள் முழு வீச்சில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் உள்ளது. சட்டப்பேரவை கூடத்தில் உள்ள உறுப்பினர்கள் இருக்கைகளில் கம்ப்யூட்டர் கருவி (Tablet Device) பொருத்தும் பணி நிறைவடைந்துவிட்டது.
/indian-express-tamil/media/post_attachments/c43cd236-633.jpg)
தேசிய தகவல் மையத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நெட்வொர்க் (NICNET) மூலம் அதிவேக இணைய சேவை (Internet Connection) வழங்கும் பணி நிறைவுபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை செயலக ஊழியர்கள் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கும் நேவா (NeVA) பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க, பிரத்தியேகமாக, அமைப்பு ஒருங்கிணைப்பாளர் (System Integrator) மூலம் சட்டப்பேரவை வளாகத்தில் நேவா பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, சட்டப்பேரவையில் எழுப்பப்படும் வினாக்களும் மற்றும் அதற்கான விடைகளும் நேவா (NeVA) கம்ப்யூட்டர் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு துறை செயலர் துறை தலைவர், அலுவலகத்தின் தலைவர் மற்றும் பிற அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் நேவா (NeVA) கம்ப்யூட்டர் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கணினி மயமாக்கும் (Digitization) பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவை தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.