பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி கலவை கல்லூரி; திறந்து வைத்தார் ரங்கசாமி

புதுச்சேரியில் பாரம்பரியமிக்க கலவை கல்லூரியை ரூ.5 கோடி செலவில், அதே பழமை மாறாமல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புதன்கிழமை திறந்து வைத்தார்

புதுச்சேரியில் பாரம்பரியமிக்க கலவை கல்லூரியை ரூ.5 கோடி செலவில், அதே பழமை மாறாமல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புதன்கிழமை திறந்து வைத்தார்

author-image
WebDesk
New Update
pdy

புதுச்சேரி, மிஷன் வீதியில் பாரம்பரியமிக்க கலவை கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளி (கலவை சுப்புராய செட்டியார் கல்லூரியின்) புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சுமார்‌ ரூ.5.25 கோடி‌ செலவில் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

புதுச்சேரியில் பாரம்பரியமிக்க கலவை கல்லூரியை ரூ.5 கோடி செலவில், அதே பழமை மாறாமல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி புதன்கிழமை திறந்து வைத்தார்.

Advertisment

புதுச்சேரி, மிஷன் வீதியில் பாரம்பரியமிக்க கலவை கல்லூரி அரசு மேல்நிலைப் பள்ளி (கலவை சுப்புராய செட்டியார் கல்லூரியின்) புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் சுமார்‌ ரூ.5.25 கோடி‌ செலவில் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

இப்பள்ளிக் கட்டடத்தின் திறப்பு விழா இன்று (30.04.2025) நடைபெற்றது. இவ்விழாவில்  துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், முதலமைச்சர்  ந. ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு புதுச்சேரி நகரப் பொலிவுறு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினர்,

சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வி அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,  பொதுப்பணித்துறை அமைச்சர் க. லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்  வி.பி.ராமலிங்கம், புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் . எட்டியென் ரோலண்ட்-பியக், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும் கல்வித் துறை செயலருமான பி. பிரியதர்ஷினி,  அரசுச் செயலர் (தொழில்) மற்றும் புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்ட தலைமை செயல் அதிகாரி ருத்ரகௌடு,  கல்வித்துறை இணை இயக்குநர்  சிவகாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: