/indian-express-tamil/media/media_files/Q7iF0pKhF1QL2f09R0j2.jpg)
புதுச்சேரியை சேர்ந்த தண்டனை கைதி காரைக்கால் மாவட்ட சிறையில் தூக்கிட்டு தற்கொலை
பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
புதுச்சேரி பொறையூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீஸ் (25). கடந்த ஆண்டு தனது காதலியை எரித்துக் கொன்ற வழக்கில் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறையில் உள்ள கைதிகளிடையே தொடர்ந்து மோதல் போக்கு கடைப்பிடித்ததால், பிரதீஷை காரைக்கால் மாவட்ட கிளை சிறைக்கு மாற்றம் செய்தனர்.
காரைக்கால் சிறைக்கு மாற்றப்பட்ட பிரதேஷ், ஒரு சில வாரங்களுக்கு முன்பு சமையல் அறையில் ஆறுமுகம் என்ற கைதியை சரமாரியாக தாக்கினார். இது குறித்து காரைக்கால் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு, கைதி பிரதீஷ் தான் கட்டி இருந்த கயிலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் நகர போலீசார், பிரதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.