Advertisment

தொழிலதிபா்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை... இணையம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த மர்ம கும்பல்!

சம்பந்தப்பட்டவா்களுக்கு கொரியரில் பாா்சல் வந்துள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்து பாா்த்தபோது அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் மா்ம நபா்கள் கூறுகின்றனா். மேலும், சம்பந்தப்பட்டோா் மீது வழக்குப் பதியப்படும் என்றும் புதுச்சேரி போலீசார் கூறியுள்

author-image
WebDesk
New Update
Puducherry Cyber Police warns against  online scams Tamil News

புதுச்சேரியில் தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இணையவழி மோசடி கும்பல் நூதன முறையில் ரூ.7 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

புதுச்சேரியில் தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் இணையவழி மோசடி கும்பல் நூதன முறையில் ரூ.7 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Advertisment

புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "புதுச்சேரியில் சில பிரபலமான கொரியா் நிறுவனங்களின் பெயா்களை பயன்படுத்தி தொழிலதிபா்கள், மருத்துவா்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்களை இணையவழியாக மா்ம கும்பல் ஏமாற்றி வருகிறது.

சம்பந்தப்பட்டவா்களுக்கு கொரியரில் பாா்சல் வந்துள்ளதாகவும், அதை ஸ்கேன் செய்து பாா்த்தபோது அதில் போதைப் பொருள் இருப்பதாகவும் மா்ம நபா்கள் கூறுகின்றனா். மேலும், சம்பந்தப்பட்டோா் மீது வழக்குப் பதியப்படும் என்றும், அதிலிருந்து விடுவிக்க பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்தவும் கூறி மோசடியில் ஈடுபடுகின்றனா். இதுபோன்று பல்வேறு வழிகளில் யாரேனும் மிரட்டினால் ஏமாற வேண்டாம். புதுச்சேரியில் மட்டும் ரூ. 7 கோடி வரை பொதுமக்கள் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனா்" என்று கூறப்பட்டுள்ளது. 

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment