பதவி பறிப்பு மசோதா நடைமுறைக்கு பொருந்தாது: நாராயணசாமி பேட்டி

"நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த பதவி பறிப்பு சட்ட மசோதா நடைமுறைக்கு பொருந்தாது. எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது." என்று நாராயணசாமி தெரிவித்தார்.

"நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த பதவி பறிப்பு சட்ட மசோதா நடைமுறைக்கு பொருந்தாது. எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது." என்று நாராயணசாமி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Puducherry Former CM Congress leader V Narayanasamy on Bills for removal of PM CMs ministers Lok Sabha BJP govt Tamil News

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 10 முறைக்கு மேல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது." என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பதவி பறிப்பு சட்ட மசோதா நடைமுறைக்கு பொருந்தாது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- 

Advertisment

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த பதவி பறிப்பு சட்ட மசோதா நடைமுறைக்கு பொருந்தாது. எதிர்கட்சிகளை மிரட்டும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது. கடந்த தேர்தலில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு தான் மோடி அரசு பதவிக்கு வந்தது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 10 முறைக்கு மேல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தான் முக்கியம் என ரங்கசாமி கூறியிருந்தார். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அந்தஸ்து தர முடியாது என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். 

என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு இலவச பேருந்து விடப்படும், கொரானா காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும், அரசு காலியிடங்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

Advertisment
Advertisements

மத்தியில் பா.ஜ.க ஆட்சியும், மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர்  டெல்லி சென்று பிரதமரை சந்தித்தால், மாநில அந்தஸ்து கிடைக்கும் என பா.ஜ.க தலைவர் ராமலிங்கம் கூறியுள்ளார். பா.ஜ.க ஆட்சியில் மாநில அந்தஸ்து கிடைக்காது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசிடம் மாநில அந்தஸ்தை கேட்டு பெறுவோம். 

இவ்வாறு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.  

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் எம்.எல்.ஏ அனந்தராமன், எம்.எல்.ஏ வைத்தியநாதன் உடன் இருந்தனர்

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Narayanasamy Puduchery

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: