Advertisment

புதுவை சிறுமி கொலை வழக்கு முக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி: பரபரப்பு

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில்‌ அடைக்கபட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Puduch.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமி கொலை வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Advertisment

நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றால், இருவர் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்துவர் என்பதால் காலாப்பட்டு சிறைக்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸ், விவேகானந்தன் இருவரையும் மற்ற விசாரணை கைதிகளுடன் அடைத்தால், பிரச்னை எழும் என்பதால் தனி சிறை அறையில் அடைக்கப்பட்டனர். 

சிறுமி கொலை வழக்கில் கைதாகி, காலாபட்டு மத்திய சிறையின் தனி செல்லில்‌ அடைக்கபட்டுள்ள முக்கிய குற்றவாளி விவேகானந்தன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சக கைதி கருணாஸ் சத்தம் போடவே, சிறை வார்டன் ஓடி வந்து காப்பாற்றி எச்சரித்தார். 

இந்நிலையயில் இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி, முத்தியால்பேட்டை போலீசார் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment