புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்; படித் தொகை உயர்வு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு படித்தொகை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு படித்தொகை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Puducherr

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு படித்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Puducherry | யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பணியாற்றும் அரசுப்பணியாளர்களுக்கு படித் தொகையை உயர்த்தி புதுச்சேரி நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை (கிராஜூவிட்டி), வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி முதல் அகவிலைப்படி 46 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி உதவி தொகைககளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து ஓய்வூதியம், இறப்பு கிராஜூவிட்டி, பயணப்படி ஆகியவை 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

வீட்டு வாடகை படி அதிகபட்சமாக எக்ஸ் வகை நகரங்களுக்கு 30 சதவிதமும், ஒய் மற்றும் இசட் வகை நகரங்களுக்கு முறையே 20 மற்றும் 10 விழுக்காடாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு எக்ஸ், ஒய் மற்றும் இசட் பிரிவு நகரங்களில் வசித்தோருக்கு முறையே 27, 18, 9 ஆகிய விழுக்காடு அளவுக்கு வீட்டு வாடைகைப்படி இருந்தது.

Advertisment
Advertisements

குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் சீருடை படி ஆகியவையும் 25 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: