/indian-express-tamil/media/media_files/2025/08/15/puduchert-g-2025-08-15-23-40-34.jpg)
சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்ற நிலையில், தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் திமுக புறக்கணித்துள்ளது. ஆனால் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
பிரதான எதிர்க்கட்சியான திமுக தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற்றனர்.
பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் . பங்கேற்றனர் இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.