Advertisment

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15 ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry govt announce tomorrow 15th oct holiday for Schools Colleges due to Heavy rain Tamil News

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில்  காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும். 

Advertisment

இதன் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கு  இன்று செவ்வாய்க்கிழமை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுகிறது." என்று கூறியுள்ளார். 

செய்தி: பாபு ராஜேந்திரன் -  புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Puducherry rain Schoolholiday holiday
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment