Advertisment

புதுச்சேரியில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த சிறுவன் மீட்பு; தி.மு.க எம்.எல்.ஏ-விடம் கேள்வி கேட்ட மக்கள்

தி.மு.க எம்.எல்.ஏ கென்னடி புதிய பாதாள சாக்கடை சிலாப்புடன் வந்து மூட முயற்சித்தார். அப்பொழுது பொதுமக்கள் நாங்கள் கூறும் போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்பொழுது ஏன் வந்து சிலாப் போடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

author-image
WebDesk
New Update
PDY 2

புதுச்சேரியில் மூடி உடைந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்த சிறுவன் மீட்பு; தி.மு.க எம்.எல்.ஏ-விடம் கேள்வி கேட்ட மக்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரி மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடையின் மேல் சிலாப் உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இந்நிலையில் உப்பளம் தொகுதிக்குட்பட்ட பாரதி வீதி பாதர் சாஹிப் வீதி சந்திப்பில் கழிவு நீர் கலக்கும் பாதாள சாக்கடையின் மேல் சிலாப் உடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் அஷ்ரப் அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் பள்ளி முடிந்ததும் அவ்வழியாக நடந்து சென்றுள்ளனர். அதில் வேலு லஷ்மி தம்பதியிரின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் பிரவின் என்பவர் உடைந்த சிலாப் மீது கால் வைத்து நடந்து சென்றபோது சிலாப் முழுவதுமாக உடைந்து அந்த தொட்டியில் விழுந்துள்ளார். இதனை கண்ட மாணவனின் பின்னாடியே வந்த தாய் லஷ்மி உடனடியாக தனது மகனை கையை பிடித்து வெளியே தூக்கி காப்பாற்றினார்.

 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க மாநில செயலாளருமான அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர். 

Advertisment

PDY

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அப்போது கடந்த 3 மாதங்களாக பாதாள சாக்கடை இணைப்பு உடைந்துள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொகுதி எம்.எல்.ஏ-விடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உடைந்த சிலாப்புகளை சரி செய்யாமல் அதனை சாக்கு போட்டு மூடி வைத்துள்ளனர் என்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட கழிவு நீர் அதிகாரிகளை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தொடர்புகொண்டு பேசிய நில நிமிடங்களில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனை கேள்விபட்ட தி.மு.க எம்.எல்.ஏ கென்னடி புதிய பாதாள சாக்கடை சிலாப்புடன் வந்து அதனை போட முயற்சித்தார். அப்பொழுது பொதுமக்கள் நாங்கள் கூறும் போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்பொழுது ஏன் வந்து சிலாப் போடுகிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினர். நீங்கள் எல்லாம் ஒரு எம்எல்ஏவா என நேருக்கு நேர் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அதன் பின்னர் அதிகாரகிள் இரும்பு மூடியை கொண்டு வந்து பாதாள சாக்கடையை மூடினர். அதிகாரிகள் பணி முடித்தும் செல்லும் வரை அதிமுக மாநில செயலாளரும் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான அன்பழகன் உடனிருந்தார். அவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் திமுக எம்.எல்.ஏ கென்னடி தனது ஆதரவாளர்களுடன் திரும்பி சென்றார். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் இப்படிதான் பாதாள சாக்கடைகள் இருக்கிறது என்றும், கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியில் ரூ,250 கோடி நிதி ஒதுக்ப்பட்டது. ஆனால் பணிகள் சரியாக செய்யப்படாததால் செப்டிக் டேங், பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர்  சாலைகளில் ஓடுகிறது. எனவே விரைந்து போர்க்கால அடிப்படையில் சேதமடைந்து பழுதடைந்துள்ள பாதாள சாக்கடை மூடிகளை பொதுப்பணித்துறை அதிகரிகள் அகற்றிவிட்டு புதியதாக மாற்ற வேண்டும். பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment