புதுச்சேரியில் இலவச மனை பட்டா வழங்க நரிக்குறவர்கள் கோரிக்கை; கலெடருக்கு பாசிமணிகளை அணிவித்து மனு

புதுச்சேரியில் நரிக்குறவர்கள் இலவச மனை பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு ஊசி மணி, பாசிமணிகளை மாலையாக அணிவித்து மனு அளித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PDY collector narikuravar

புதுச்சேரியில் நரிக்குறவர்கள் இலவச மனை பட்டா வழங்க கோரிக்கை

புதுச்சேரியில் நரிக்குறவர்கள் இலவச மனை பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு ஊசி மணி, பாசிமணிகளை மாலையாக அணிவித்து மனு அளித்தனர்.

Advertisment

புதுச்சேரி வில்லியனூர் மூர்த்தி நகர்,கொம்பாக்கம் மற்றும் திருக்காஞ்சி மெயின் ரோடு ஆகிய பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக சாலை ஓரங்களில் தார்ப்பாய் அமைத்து வசித்து வரும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்கார மக்களுக்கு இலவச மனைப்பட்ட  வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களின் மனுக்கள் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

pdy narikuravars

இந்த நிலையில், ‌பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வந்திருந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து அவர்கள் எடுத்து வந்த  ஊசிமணி பாசிமணி மாலைகளை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு மாலையாக அணிவித்து ஆரவாரமாக கைதட்டி மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் குலத்துங்கன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

Advertisment
Advertisements

 

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: