ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; ஆயுர்வேத மருத்துவர்கள் போராட்டம் – புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஆணையை வழங்கிய முதலமைச்சர் ரங்கசாமி; உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் – புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ஆணையை வழங்கிய முதலமைச்சர் ரங்கசாமி; உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் – புதுச்சேரி செய்திகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
puducherry cm

புதுச்சேரி கல்வித்துறையில் பணி புரியும் ரொட்டி பால் ஊழியர்களுக்கு இன்று சம்பள உயர்வு ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது சட்டமன்ற அலுவலகத்தில் ஊழியர்களுக்கு வழங்கினார்.

Advertisment

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்கள் அரசு பள்ளியில் பால் காய்ச்சி மாணவர்களுக்கு வழங்கும் வேலை செய்து வருகின்றனர். ரூ .10 ஆயிரம் சம்பளம் பெற்று வந்த நிலையில், கடந்த வருடம் இவர்களுக்கு ரூ .18 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் கடந்த வருடம் சட்டசபையில் அறிவித்தனர். 

Advertisment
Advertisements

தொடர்ந்து இன்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும்  கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் முதல்வர் அலுவலகத்தில் சம்பள உயர்வு அணையை 917 ஊழியர்களுக்கு வழங்கினார்கள். 

இதனையடுத்து, ஊழியர்கள் மகிழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் அவருக்கு கை குலுக்கி இனிப்புகள் வழங்கியும், மலர்கள் தூவியும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

மருத்துவர்கள் போராட்டம்

உயர்த்தப்பட்ட பயிற்சி உதவி தொகையை வழங்க வலியுறுத்தி ஆயுஷ் இயக்ககம் முன்பு 50கும் மேற்பட்ட ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என கடந்த 2023-ஆம் ஆண்டில் புதுவை முதல்வா் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால், அறிவித்தபடி இன்னும் உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படவில்லை. இதனை அடுத்து ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பாரதி பூங்கா அருகே உள்ள ஆயுஷ் இயக்குனர் அலுவலகம் முன்பு ஆயுர்வேத பயிற்சி மருத்துவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 50கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டு, உயர்த்தப்பட்ட உதவித் தொகையை வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: