Advertisment

கஞ்சா கும்பலை துரத்திய போலீஸ்: குக்கர் மூடியால் கொலை வெறி தாக்கு: புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரியில் கஞ்சா கும்பலை பிடிக்க சென்ற தலைமை காவலரை குக்கர் மேல்மூடியால் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
 Puducherry police attacked by ganja gang with cooker lid for chasing 2 arrested Tamil News

தலைமை காவலர் வசந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த வில்லியனூர் போலீசார், தப்பியோடிய மூவரில் 2 பேரை கைது செய்தனர்.

புதுச்சேரி கோபாலன்கடை - அம்மா நகரில் ஒரு வீட்டில்  கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமை காவலர் வசந்த் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர் வசந்த், உயர் அதிகாரிகள் மற்றும் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றார்.

Advertisment

அப்போது, வீட்டில் இருந்த 3 இளைஞர்கள் விற்பனைக்காக கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக தயார் செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர்களை பிடிக்க முயன்ற காவலரை, மூவரும் சேர்ந்து குக்கர் மேல்மூடியால் சராமரியாக தாக்கியதில் முகம் சிதைந்த நிலையில் காவலர் மயக்கமடைந்து அங்கேயே சரிந்தார்.

மேலும் சாக்கு பையால் அவரின் முகத்தை மூடி கொலை முயற்சி செய்த நிலையில், வில்லியனூர் போலிசார் அங்கு வந்ததை கண்டதும் இருவரும் தப்பியோடினர். தலைமை காவலர் வசந்தை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த வில்லியனூர் போலீசார், தப்பியோடிய  மூவரில் 2 பேரை கைது செய்தனர். 

விசாரணையில் பிரதீப்,சதீஷ் என்பதும் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கஞ்சா கும்பலை பிடிக்க சென்ற காவலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment