புதுச்சேரியில் ஆபரேஷன் திரிசூல் என்ற பெயரில் காவல்துறை சார்பில் ரவுடிகளை நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை ஒடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
/indian-express-tamil/media/post_attachments/8b95a3e9-80b.jpg)
/indian-express-tamil/media/post_attachments/2ab46155-52b.jpg)
/indian-express-tamil/media/post_attachments/1f72c82f-8e0.jpg)
இந்தநிலையில், பா.ஜ.க பிரமுகர் உமா சங்கர் கருவடிக்குகுப்பம் பகுதியில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத்தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆபரேஷன் திரிசூல் மேற்கொள்ளப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/8de94cce-fa5.jpg)
/indian-express-tamil/media/post_attachments/6843ac38-e0c.jpg)
/indian-express-tamil/media/post_attachments/7fb6ab3c-9ef.jpg)
இப்பகுதியை சார்ந்த ரவுடிகள் மற்றும் முன்னாள் ரவுடிகள் மற்றும் குற்றவாளி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 4.30 மணிக்கு கருவடிக்குப்பம் பகுதியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையில் கண்காணிப்பாளர் ஜிந்தா, ஆய்வாளர்கள் இனியன், வரதராஜன் ஆகியோர் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக வீடுகளில் சோதனையிட்டனர். அவர்களது வீடுகளில் வெடி பொருள், ஆயுதங்கள் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா.. என்பது குறித்து சோதனையிட்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/f7477964-345.jpg)
/indian-express-tamil/media/post_attachments/21beb20d-6e6.jpg)
மேலும் ஊருக்குள் நுழைய கூடாது என மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்ட ரவுடிகளை வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று உறவினர்களுக்கு போலீசார் எச்சரித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/8f265d86-afe.jpg)
/indian-express-tamil/media/post_attachments/7ce0ba39-7a1.jpg)
அதிகாலை 4:30 மணி முதல் காலை 7 மணி வரை நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் கருவடிக்குப்பம், சாமி பிள்ளை தோட்டம் பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது.