கையில் பட்டாக் கத்தி: புத்தக பையில் நாட்டு வெடிகுண்டு: சக மாணவனை கத்தியால் குத்திய மாணவன்!

பள்ளியில் கிண்டல் செய்த சக மாணவரை கத்தியால் குத்திய மாணவரின் பையில் இருந்து 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த மாணவர் காவலர் ஒருவரின் மகன் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளியில் கிண்டல் செய்த சக மாணவரை கத்தியால் குத்திய மாணவரின் பையில் இருந்து 6 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த மாணவர் காவலர் ஒருவரின் மகன் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Knife

புதுச்சேரியில் காதலி போல குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றியதால் ஆத்திரம் அடைந்த மாணவர் வகுப்பறையில் சக மாணவரை கத்தியால் குத்தினார். அவரது புத்தகப்பையில் இருந்து 6 நாட்டு வெடிகுண்டுகளும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

மாணவர்களில் கோஷ்டி புதுச்சேரி ரெட்டியார்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் ஒருவரை ஒருவர்கேலி கிண்டல் செய்துகொள்வது வழக்கம். இந்நிலையில் ஒரு தரப்பை சேர்ந்த மாணவர், அதே பள்ளியில் படிக்கும் மாணவியை காதலித்துவந்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட எதிர்தரப்பு மாணவர் ஒருவர், அந்த மாணவி பெயரில் போலி ‘பேஸ்புக்' முகவரியை உருவாக்கி அந்த மாணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அவரும் தனது காதலி தான் என நினைத்து அதில்  வரும் தகவல்களுக்கு பதில் போட்டு வந்துள்ளார். இப்படியே அவர்களின் காதல் வயப்பட்ட தகவல் பரிமாற்றம் 3 மாதங்களை கடந்துள்ளது. ஒரு கட்டத்தில் நான்தான் குறுஞ்செய்தி அனுப்பினேன், "நான் உனது காதலி இல்லை. நீ என்னிடம் ஏமாந்து விட்டாயே?' என்று கிண்டல் செய்தார்.

இந்த தகவல் வகுப்பு முழுவதும் பரவியதால் மாணவியை காதலித்த மாணவர் அதை அவமானமாக கருதினார். இந்த நிலையில், பள்ளியில் நேற்று பகல் 11.30 மணி இடைவேளையின் போது, வகுப்பறையில் மற்ற மாணவர்கள் அவரை பார்த்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மாணவர், தனது புத்தக பையில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத் தியை எடுத்து வைத்துக்கொண்டு பேஸ்புக் மூலம் தன்னை ஏமாற்றிய மாண வரை நோக்கி ஓடினார்.

Advertisment
Advertisements

இதைப்பார்த்ததும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அம்மாணவரை மடக்கி பிடித்தனர். ஆனால் அதையும் மீறி அவரை ஏமாற்றிய மாணவரின் கையில் கத்திக்குத்து விழுந்தது. உடனே  அருகில் இருந்தவர்கள் அவரிடம் இருந்து கத்தியை பிடுங்கினர். அதே வேளையில் இந்த மோதலை பார்த்து வகுப்பறையில் இருந்த மாணவ,மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதனால் பள்ளி முழுவதும்பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் காயமடைந்த மாணவரை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின் மாணவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே கத்தியால் குத்திய மாணவரின் புத்தகப் பையை ஆசிரியர்கள் பார்த்த போது, அதில் 6 நாட்டு வெடி. குண்டுகள் இருப்பது கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று, 6 நாட்டு வெடிகுண்டுகளையும் பறி முதல் செய்தனர்.

மேலும் அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் யூ-டியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்தாக கூறியுள்ளார். மேலும் விசாரணையில், காதலி பெயரில் போலியாக பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு ஏமாற்றிய மாணவரை பழி வாங்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி புதுவையில் இருந்து பஸ் மூலம் திண்டிவனம் சென்று அங்கு சுமார்  3 அடி நீள பட்டாக்கத்தியை வாங்கி தனது பையில் வைத் துக் கொண்டார்.

பின்னர் அரியாங்குப்பம் சென்று பட்டாசுகளை வாங்கி அவற்றில் இருந்து வெடிமருந்துகளை பிரித்தெடுத்து வீட்டில் வைத்து யூ-டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்துள்ளார். பின்னர் அவற்றை பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வந்து சக மாணவரை கத்தியால் குத்திய நிலையில் மாணவர் பிடிபட்டுள்ளார். கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்த மாணவரின் தந்தை, புதுவை டி நகரில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கோஷ்டி சண்டையால் வகுப்பறையில் சக மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் புதுவை பள்ளிகள் வட்டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: