Advertisment

ஒலித்த தேசிய கீதம், செல்போனை எடுத்த சபாநாயகர்: தமிழிசை செய்த காரியம்

தேசிய கீதம் ஒலிக்க தொடங்கியதையடுத்து சபாநாயகர் செல்வத்திடம் செல்போனை ஆஃப் செய்யும்படி புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
Speaker Selvam spoke on his cell phone

கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவ படத்திற்கு சபாநாயகர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Puducherry | சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவ படத்திற்கு சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

பின்னர் காவல்துறை மற்றும் பல்வேறு படைப் பிரிவுகளின் மரியாதையை கவர்னர் தமிழிசை ஏற்றுக்கொண்டார். மேலும் ஒற்றுமை தினம் உறுதிமொழியும் வாசிக்கப்பட்டது.

மேலும், மாணவ-மாணவியர் பங்கேற்ற ஒற்றுமை ஒட்ட போட்டியையும் தமிழிசை சௌந்தரராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த விழாவின்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது சபாநாயகர் செல்வம் செல்போனை எடுத்து பேசிவிட்டார். இதைப் பார்த்த கவர்னர் தமிழிசை சட்டென சுதாரித்து செல்போனை ஆஃப் செய்யும்படி வலியுறுத்தினார்.

இந்த காணொலி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment