/indian-express-tamil/media/media_files/2025/06/28/puducherry-state-president-election-vp-ramalingam-mla-minister-a-namassivayam-tamil-news-2025-06-28-11-11-10.jpg)
புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவருக்கான தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெறும் நிலையில், அமைச்சர் நமச்சிவாயம், வி.பி.ராமலிங்கம் ஆகியோர் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
பா.ஜ.க-வில் அகில இந்திய அளவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதற்கு முன்பாக, பல்வேறு மாநிலங்களில் புதிய தலைவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி பா.ஜ.க மாநில தலைவரான செல்வகணபதி எம்.பி.க்கு கட்சி நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது, தலைவர் பதவியை பெற பலர் முயற்சி செய்தனர். ஆனால், புதுச்சேரி
மாநில பா.ஜ.க-வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி இழுபறியாக நீடித்து வந்தது.
இந்த நிலையில், தற்போது புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க மைய குழு கூட்டம் நடந்தது. இதற்கிடையே, பா.ஜ.க மாநில புதிய தலைவர் வருகிற 30-ந்தேதி தேர்வு செய்யப்பட இருக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேட்பு மனு தாக்கலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேர்தல் நடத்தப்பட்டு உடனடியாக புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பா.ஜ.க மேலிடபொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா புதுச்சேரி வந்தார். தொடர்ந்து, எல்லைப் பிள்ளைச்சாவடியில் உள்ள கட்சி அலுவலகத்திற்குஅவர் சென்றார். அங்கு கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ கணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர்களை தனித்தனியாகவும் சந்தித்து
யாருக்கு வாய்ப்பு?
அப்போது புதிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா இன்னும் 3 நாட்கள் புதுச்சேரியில் முகாமிட்டு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார். புதிய தலைருக்கான பட்டியலில் அமைச்சர் நமச்சிவாயம், வி.பி.ராமலிங்கம் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. இருவரில் யார் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது 30-ந்தேதி தெரிந்து விடும்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.