Advertisment

மீனவர்கள் படுகொலை: இலங்கை ஆட்சியாளர்கள் மீது வழக்கு தொடுக்க கோரி புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
puducherry Tamil Nadu fishermen death protest near Swadeshi Cotton Mill Tamil News

தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு -  புதுச்சேரி மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி சுதேசி  மில் அருகில்  மங்கையர் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறி கொடுந்தாக்குதல் நடத்திவரும் இலங்கை அரசு உடனான அரசியல் உறவுகளை உடனே முறித்துக் கொள்ள வேண்டும் என்றும், இதுவரையில், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களை அத்துமீறிப் படுகொலை செய்துள்ள இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  அனைத்து மீனவ கிராமத் தலைவர்கள், பஞ்சாயத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisment
Advertisement

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி. 

Protest Srilanka Puducherry Fishermen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment