/indian-express-tamil/media/media_files/2025/04/04/efnT6N7ZJfIBvwRcKE0F.jpg)
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர் குடியிருப்பில் வீட்டை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பேராசிரியர் குடியிருப்பில் வீட்டை உடைத்து தங்கம், வெள்ளி, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் மைக்ரோ பயாலஜி பேராசிரியர் சித்தார்த்த புஷி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் குடும்பத்தோடு இந்த வீட்டில் தங்கி இருந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். குடும்பத்தோடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிம்லா சுற்றுலா சென்றார்.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை அவரது வீட்டின் கதவு திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளிகள் காலாப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
சிம்லா சுற்றுலா சென்ற பேராசிரியர் சித்தார்த்த புஷிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேராசிரியரின் நெருங்கிய உறவினர்களை வரவழைத்து பார்த்தபொழுது வீட்டின் பீரோவில் இருந்த 232 கிராம் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் என மொத்தம் ரூபாய் 25லட்சம் மதிப்புள்ளான பொருள்களும், ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடைய இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.