சர்வதேச தண்ணீர் விருது பெற்ற புனே விஞ்ஞானி; முதல் இந்தியர் என பெருமை!

விஞ்ஞானி குல்கர்னிக்கு இந்த விருது 2024-ல் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 15-ம் தேதி நடந்த விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

விஞ்ஞானி குல்கர்னிக்கு இந்த விருது 2024-ல் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 15-ம் தேதி நடந்த விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
first scientist water prize

நிதி ஆயோக்கின் 12-வது திட்டத்தின் பணிக் குழுவின் இணைத் தலைவராக குல்கர்னி பணியாற்றினார். மேலும், தேசிய நீர்நிலை வரைபடத் திட்டத்தை உருவாக்குவதிலும் அவர் பங்களிப்பு செய்துள்ளார்.

புனேயைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி, அமெரிக்காவின் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தால் 2009-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இரு ஆண்டுக்கு ஒருமுறை அளிக்கப்படும் 'சர்வதேச நீர் விருதை' (International Water Prize) வென்ற இந்திய துணைக்கண்டத்தின் முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வளரும் நாடுகளில் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்காக இந்த விருது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

குல்கர்னிக்கு இந்த விருது 2024-ல் அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 15-ம் தேதி நடந்த விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

நிதி ஆயோக்கின் 12-வது திட்டத்தின் பணிக் குழுவின் இணைத் தலைவராக குல்கர்னி பணியாற்றினார். மேலும், தேசிய நீர்நிலை வரைபடத் திட்டத்தை (National Aquifer Mapping Program) உருவாக்குவதிலும் அவர் பங்களிப்பு செய்துள்ளார். புனேவில் உள்ள ஏ.சி.டபிள்யூ.ஏ.டி.ஏ.எம் (ACWADAM) (நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான மேம்பட்ட மையம் - Advanced Center for Water Resources Development and Management) அமைப்பின் நிறுவனர் மற்றும் செயலாளராகவும் அவர் உள்ளார். இதைத் தவிர, ஷிவ் நாடார் இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ் டீம்டு டூ பி யுனிவர்சிட்டியில் கிராமப்புற மேலாண்மைத் துறையில் (Rural Management) பேராசிரியராகவும், ஐ.ஐ.டி பம்பாய் மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.

இது குறித்து குல்கர்னி பேசுகையில், "இந்த விருது, சமூகக் கூட்டாண்மையின் மூலம் நீர்நிலை அடிப்படையிலான நிலத்தடி நீர் மேலாண்மையில் ஏ.சி.டபிள்யூ.ஏ.டி.ஏ.எம் நிறுவனம் ஏற்படுத்திய பல்வேறு கூட்டு முயற்சிகள் மற்றும் கூட்டாண்மைகளின் பிரதிபலிப்பாகும். நிலத்தடி நீரை ஒரு பொதுவான வளமாக நிர்வகிப்பது, இந்தியாவில் நிலத்தடி நீர் வளங்களைச் சுற்றியுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் ஒரு வழியாகும்" என்றார்.

Advertisment
Advertisements

இந்த ஓயு சர்வதேச தண்ணீர் விருது, வளரும் நாடுகளில் வசிக்கும் ஏழைகளின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி, கற்பித்தல் அல்லது சேவை நடவடிக்கைகளின் மூலம் குறிப்பிடத்தக்க சர்வதேச பங்களிப்புகளை செய்த ஒரு தனிநபருக்கு அங்கீகாரம் அளித்து, கௌரவிக்கிறது. இந்த விருது ஒரு கோப்பை மற்றும் 25,000 அமெரிக்க ரொக்கப் பரிசைக் கொண்டுள்ளது.

Pune

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: