/tamil-ie/media/media_files/uploads/2017/09/banwari-lal.jpg)
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக கவர்னராக இருந்த ரோசையா, கடந்த ஆண்டு பதவி காலம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் மகாராஷ்ட்ரா கவர்னரான வித்யாசாகர் ராவ், பொறுப்புக் கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தமிழக கவர்னராக பன்வணிலால் புரோஹித் நியமிக்கப்படுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இவர் மேகாலயா கவர்னராக பதவி வகித்து வருகிறார்.
மேலும், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு புதிய துணைநிலை கவர்னராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மேகாலயா கவர்னராக கங்கா பிரசாத், அசாம் கவர்னராக ஜெகதீஷ் முகி, அருணாச்சல பிரதேச கவர்னராக பி.டி.மிஸ்ரா, பீஹார் கவர்னராக சத்யபால் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.