Advertisment

விமான படையில் இணையும் ரஃபேல் போர் விமானங்கள்.. அம்பாலாவில் பிரம்மாண்ட விழா!

பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர்.

author-image
WebDesk
New Update
விமான படையில் இணையும் ரஃபேல் போர் விமானங்கள்.. அம்பாலாவில் பிரம்மாண்ட விழா!

Rafale induction Rajnath : ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இன்று முறைப்படி இணைக்கப்படுகின்றன. அம்பாலா விமான தளத்தில் பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் விமானங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Advertisment

பிரான்ஸ் நாட்டிடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தடைந்தன. இந்நிலையில், 5 ரஃபேல் விமானங்களை இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கும் நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

ஹரியாணா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெறும் இந்த பெருமைகுரிய நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் பங்கேற்று விமானங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர்.

publive-image

இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன், 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன. 36 ரஃபேல் போர் விமானங்களில் 30 விமானங்கள் போர் விமானங்களாக இருக்கும். எஞ்சிய 6 விமானங்கள் பயிற்சி விமானங்களாக பயன்படுத்தப்படும். பயிற்சி விமானங்களில் இரண்டு இருக்கைகளுடன் போர் விமானங்களுக்கு உரிய அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன

இவற்றை முறைப்படி விமான விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது. விமானப்படையின் 17வது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் 5 விமானங்களும் இணைக்கப்படுகின்றன.

publive-image

அதைதொடர்ந்து, இருதரப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.கடந்த 2017-ல் இருந்து இந்தியாவில் பார்லி மேற்கொள்ளும் 3-வது அரசு முறைப் பயணம் இதுவாகும்.ரஃபேல், தேஜஸ் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.ரஃபேல் விமானங்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இரண்டாம் கட்டமாக வரும் நவம்பர் மாதம் 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment