scorecardresearch

காங். தலைவர் தேர்தல்: ‘என் மனம் தெளிவாக இருக்கிறது’ – மௌனம் கலைத்த ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர், காங்கிரஸ் கட்சியின் விசுவாசி என்ற முறையில் ஒற்றுமை இந்தியா யாத்திரையில் பங்கேற்பதாக ராகுல் காந்தி கூறினார்.

Rahul Gandhi, Congress president elections, Congress president, Bharat Jodo Yatra, Congress, indian express, political pulse

காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து மௌனம் கலைத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்காததற்கும், தேர்தலில் பங்கேற்காததற்கும் ஒற்றுமை இந்தியா யாத்திரையில் பங்கேற்பதற்கும் இடையே எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைத் தெளிவாகத் தீர்மானித்திருப்பதாகவும், “என் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை” என்று உறுதியாகக் கூறினார்.

“எங்கே முரண்பாடு இருக்கிறது? இதை வைத்து, நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. நான் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்துடன் உடன்படும் நபராகவும் இந்த யாத்திரையில் பங்கேற்கிறேன். இந்த யாத்திரையில் நான் பங்கேற்பதில் எந்த முரண்பாடும் இருப்பதாக நான் பார்க்கவில்லை” என்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட மாட்டார் என்பதை அவரது கருத்துகள் தெளிவாகக் காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அவர் ஏன் போட்டியிட விரும்பவில்லை என்ற கேள்விக்கு, ராகுல் கூறியதாவது: “இங்க பாருங்கள்.. நான் தலைவராவேனா அல்லது தலைவராகமாட்டேனா என்பது காங்கிரசில் தலைவர் தேர்தல் நடக்கும்போது இது தெளிவாகத் தெரியும். அப்போது எல்லாம் தெளிவாகிவிடும். அதுவரை காத்திருங்கள்… பார்க்கலாம். நான் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிற்கவில்லை என்றால், நீங்கள் ஏன் நிற்கவில்லை என்று கேட்கலாம், அதன் பிறகு நான் அந்த கேள்விக்கு பதிலளிக்கிறேன்… காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கும்போது தெளிவாகிவிடும். நான் எனது முடிவுகளை மிகத் தெளிவாக எடுத்துவிட்டேன்.” என்று ராகுல் காந்தி கூறினார்.

ஒற்றுமை இந்தியா யாத்திரையின் 2-வது நாளில் செய்தியாளர்களுடன் ஜாலியாக பேசிய ராகுல் காந்தி மேலும் கூறியதாவது: “காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கும்போது… உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். நான் முடிவு செய்யவில்லை என்று சொன்னீர்கள். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை மிகத் தெளிவாக மனதில் தீர்மானித்துள்ளேன். என் மனதில் எந்தக் குழப்பமும் இல்லை.” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள உள்கட்சி வேறுபாடுகளை அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து ராகுல் காந்தி கூறியதாவது: “அவர்களை (கட்சியை விட்டு வெளியேறுபவர்களை) நான் ஏன் சாமாதானம் செய்யவில்லை? என்றால், அவர்கள் மீது அழுத்தம் கொடுப்பதில் என்னை விட பாஜக சிறந்த வழியைக் கொண்டுள்ளது… இன்னும் தீவிரமாக, இந்த நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் தங்கள் ஆட்களை நுழைத்துள்ளனர். இந்த நிறுவனங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கின்றனர். சிபிஐ, இ.டி, வருமானவரித் துறையின் பங்கு உங்களுக்குத் தெரியும். இந்த விஷயங்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, நாங்கள் இனி ஒரு அரசியல் கட்சியுடன் போராடவில்லை. நாங்கள் ஒரு அரசியல் கட்சியுடன் போராடுகிறோம், ஆனால் அந்த போராட்டம் என்பது இப்போது ஒரு அரசியல் கட்சிக்கும் மற்றொரு அரசியல் கட்சிக்கும் இடையே இல்லை. இப்போது இந்திய அரசின் கட்டமைப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையேதான் போராட்டம்.” என்று கூறினார்.

150 நாட்களில் 3,570 கிலோமீட்டர் தூரம் 12 மாநிலங்களில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக ராகுல் காந்தி கூறினார்: “இது எளிதான போராட்டம் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள்… ஊடகங்கள் எதிர்க்கட்சிகளுடன் இல்லை… நீங்கள் இருக்க விரும்பாததால் அல்ல. ஆனால், நீங்களும் அழுத்தத்தில் இருக்கிறீர்கள். உங்கள் உரிமையாளர்களுக்கு குறிப்பிட்ட உறவுகளில் உள்ளனர். எனவே இது எளிதான போராட்டம் அல்ல. அதனால் பலர் போராட விரும்பவில்லை. எங்கேயே சிக்கிக்கொண்டோம் என்று நிறைய பேர் உணர்கிறார்கள்… பாஜகவுடன் சமாதானம் செய்வது எளிது, அவர்களுக்கு முன்னால் கைகளை கூப்பினால் அவர்கள் வாழ்க்கை எளிதாகிவிடும். துரதிர்ஷ்டவசமாக, இது எனது நடைமுறை அல்ல. இது என்னுடைய குணம் அல்ல. எனவே இந்தியாவைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட யோசனைக்காகவும், இந்த நாட்டைப் பற்றிய சில கருத்துக்களுக்காகவும் போராடுவதே எனது குணாதிசயம். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளில் பலர் இந்த உண்மையை நம்புகிறார்கள்.

இந்த யாத்திரை தனக்கு ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்றும், “என்னைப் பற்றிய சில புரிதல்களையும், இந்த கடினமான நாட்டைப் பற்றிய சில புரிதல்களையும்” பெற முடியும் என்றும் ராகுல் காந்தி கூறினார். “நான் நினைக்கிறேன்… நான்கு மாதங்களுக்குப் பிறகு, நான் கொஞ்சம் புத்திசாலியாக இருப்பேன்.” என்று கூறினார்.

மேலும், ராகுல் காந்தி கூறியதாவது: “இந்த யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அம்சம் உள்ளது. அது காங்கிரஸ் கட்சியின் யாத்திரை என்பதால் (இருக்க வேண்டும்). ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் எனக்கு நம்பிக்கை உள்ளதாலும், அந்த இலட்சியங்கள் நாட்டில் பரவுவது முக்கியம் என்பதாலும், தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நான் நினைத்ததாலும் இந்த யாத்திரையில் பங்கேற்க ஒப்புக்கொண்டேன்” என்று கூறினார்.

“அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மட்டுமல்ல, தனிப்பட்ட நிலைப்பாட்டில் இருந்தும் இந்த யாத்திரை ஒரு சக்திவாய்ந்த விஷயம் என்று நான் நினைக்கிறேன். இது எளிதான காரியம் அல்ல. தனிப்பட்ட பயணக் கண்ணோட்டத்தில் இதைச் செய்வது பயனுள்ளது என்று நான் நினைத்தேன். என்னைப் பற்றி நான் கொஞ்சம் புரிந்துகொள்வேன் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi breaks silence on congress chief poll