scorecardresearch

ஒரு துறவியின் தவம்; கடும் குளிரில் டி சர்ட் உடன் ராகுல் காந்தி, சூடுபிடிக்கும் காங்கிரஸ்

செப்டம்பர் 11 அன்று, ஜோத்பூரில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலில் ராகுல் காந்தியின் ஆடைகளைப் பற்றி விமர்சிக்க தொடங்கினார்.

Rahul gandhi
பாரத் ஜோடோ யாத்திரையின் போது அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. (Express photo by Praveen Khanna)

பாரத் ஜோடோ யாத்திரையின் போது அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. (Express photo by Praveen Khanna)

பாரத் ஜோடோ யாத்திரையில் உள்ள எல்லாவற்றையும் போலவே, அணிவகுப்பின் முதல் நாளிலிருந்து ராகுல் காந்தியின் வெள்ளை டி-ஷர்ட்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. யாத்திரையின் தொடக்கத்தில், ரூ. 41,000 மதிப்புள்ள பர்பெர்ரி டி-ஷர்ட் அணிந்ததற்காக பாஜக ராகுல் காந்தியை விமர்சித்த போது, ​​காந்தியின் சர்டோரியல் தேர்வு திங்களன்று மீண்டும் பேசு பொருளானது.

பகலில் கடும் குளிரில் பெரும் தலைவர்களின் நினைவிடங்களுக்கு ராகுல் சென்றபோது, ​​பா.ஜ.க தலைவர்கள் போர்வைகளை போர்த்திக் கொண்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் காந்தியை துறவி என்று அழைத்தார்.

செப்டம்பர் 11 அன்று, ஜோத்பூரில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முதலில் ராகுல் காந்தியின் ஆடைகளைப் பற்றி விமர்சிக்க தொடங்கினார், அவர் “வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெர்சியை” அணிந்திருப்பதாகக் கூறினார்.

ராகுல் பாபா, வெளிநாட்டு ஜெர்சி அணிந்து… வெளிநாட்டு டி-சர்ட் அணிந்து பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நண்பர்களே, ‘பாரதம் ஒரு தேசம் அல்ல’ என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறியதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். கவுரவத்திற்காகவும் நாட்டிற்காகவும் ஆயிரக்கணக்கான சகோதரிகள் உடன்போக்கு செய்த தேசம் இது. ஆனால் இது உங்களுக்கு ஒரு நாடாகத் தெரியவில்லையா? என்றார் அமித்ஷா.

காந்தியின் வெள்ளை டி-சர்ட் மற்றும் ட்ரவுசர் பற்றிய உரையாடல் மறைந்த நிலையில், குளிர்காலத்தில் நாட்டின் வட மாநிலங்களில் யாத்திரை நுழைந்தபோது அது மீண்டும் எழுந்தது. ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லியில் யாத்திரையின் போது ராகுல் டி-சர்ட் அணிந்திருந்தார். இது சூடான ஆடைகள் ஏதுமின்றி கடும் குளிரை எப்படி எதிர்கொண்டார் என்று சமூக ஊடகப் பயனர்களை ஆச்சரியப்படுத்தியது.

ஹரியானாவில் யாத்திரையில் இணைந்த முன்னாள் பாஜக தலைவர் சுதீந்திர குல்கர்னி டிசம்பர் 21 அன்று, இன்று மதியம் ஹரியானாவில் நடந்த காவியமான பாரத் ஜோடோ யாத்திரையில் ஒரு துறவியுடன் 7.5 கிமீ நடந்தேன் என்று ட்வீட் செய்தார்.

திங்களன்று, குளிரில் தத்தளித்த டெல்லியில், ராகுல் காந்தி மீண்டும் வெள்ளை டி சர்ட் அணிந்து ராஜ்காட் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்றார். தற்போது ஜனவரி 3ம் தேதி வரை யாத்திரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது, ராகுல் காந்தி மனிதாபிமானமற்றவர். நாங்கள் குளிரில் உறைந்து ஜாக்கெட் அணிந்து கொண்டிருக்கும் போது, ​​அவர் டி-ஷர்ட்களில் வெளியே செல்கிறார். அவர் ஒரு யோகியைப் போல தனது யாத்திரையை கவனத்துடன் செய்கிறார்.

ராமரின் கடாவு (மரச் செருப்புகள்) வெகு தூரம் செல்கிறது. சில சமயங்களில் ராம்ஜியை அடைய முடியாதபோது, ​ பாரதம் கடாவுவை எடுத்துக்கொண்டு பல இடங்களுக்குச் செல்கிறது. அதேபோல உத்தர பிரதேசத்தில் ‘கடாவு’ கொண்டு வந்துள்ளோம். இப்போது கடாவ் உத்தர பிரதேசத்துக்கு வந்துவிட்டதால், ராம் ஜியும் வருவார், என்று குர்ஷித் கூறியதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், ராகுல் காந்தி கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளிநாடு செல்வார் என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் இன்று கடும் குளிரில், போர்வை போர்த்தி இந்தியாவை உடைக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மாபெரும் தலைவர்களின் நினைவிடங்களில் ராகுல் அஞ்சலி செலுத்தி வருகிறார்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி, வெளிநாட்டில் விடுமுறை செல்வதற்காக பாரத் ஜோடோ யாத்திரைக்கு இடைவேளை விட்டார் என்று பேசிய மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு பதிலளித்த ஷிரினேட் மேலும் கூறுகையில், ராகுல் காந்திக்கு யாத்திரை ஒரு துறவம் போன்றது, ஏனெனில் அவர் அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறார் என்றார்.

தன்னை ஒரு பாஜக தொண்டர் என்று அடையாளப்படுத்தும் பிரித்தி காந்தி ட்விட்டரில் கூறுகையில், ராகுல் காந்தியின் தோற்றம் விவாதிக்கப்படுகிறது. ‘உற்பத்தி’ தோற்றத்துடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் முதல் அரசியல்வாதி அவர் அல்ல. செருப்பு & காலுறைகள், பெரிய சைஸ் ஸ்வெட்டர், கசங்கிய பேன்ட் மற்றும் மப்ளர் என அரவிந்த் கெஜ்ரிவால் கூட பலரை ஏமாற்றிவிட்டார்!! அதே உத்திதான்!! என்று தாக்கினார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi foreign tshirt amit shah salman khurshid