Advertisment

கூலி உடை தரித்த ராகுல் காந்தி: நீட் எதிர்ப்பை தீவிரப்படுத்திய திமுக!

போர்ட்டர்களின் சீருடையை அணிந்த ராகுல் காந்தி, சூட்கேஸ் உள்ளிட்ட சாமான்களை தூக்கினார். இது தொடர்பான படங்களை பகிர்ந்த காங்கிரஸ், “மக்களின் நபர்” என ராகுல் காந்தியை பாராட்டியது.

author-image
WebDesk
New Update
Rahul Gandhi in porter avatar

டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் போர்டர் உடையுடன் சுமை தூக்கிய ராகுல் காந்தி.

Rahul Gandhi in porter avatar: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (செப்.21) கிழக்கு டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் போர்ட்டர்களுடன் உரையாடினார்.
தொடர்ந்து, போர்ட்டர்களின் சீருடையை அணிந்த அவர், சூட்கேஸ் உள்ளிட்ட சாமான்களை தூக்கினார். இது தொடர்பான படங்களை பகிர்ந்த காங்கிரஸ், “மக்களின் நபர்” என ராகுல் காந்தியை பாராட்டியது.

Advertisment

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “வியர்வையின் மையால் தனது நோக்கங்களை ராகுல் காந்தி எழுதுகிறார்” என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா, “இது ஒரு நாடகம். சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் டிராலியை தள்ளிக் கொண்டு செல்லும் வசதி உள்ளது. லிப்ட்டும் உள்ளது. சக்கரங்கள் கொண்ட டிராலியை தலையில் தூக்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நீட் தேர்வு மீது திமுக தாக்குதல் தொடுத்துள்ளது. நீட் தேர்வு தேவையற்றது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ளார்.
நீட் முதுகலை படிப்புக்கு பூஜ்யம் (0) கட் ஆஃப் ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் மு.க. ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் ட்விட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “நீட் தேர்வுக்கான உண்மையான காரணங்களின் கடைசி துணுக்கு இப்போது அழிந்துவிட்டது.

Rahul Gandhi in porter avatar the talking point, draws flak from BJP; DMK targets Centre over NEET

தகுதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை மற்றும் தலையெழுத்தை நீக்குதல் ஆகியவை ஒருபோதும் யூனியன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் நோக்கமாக இருக்கவில்லை, சலுகை பெற்றவர்களுக்கு (பயிற்சி அளிக்கக்கூடியவர்கள்) மற்றும் 'அங்கீகரிக்கப்பட்ட' கொள்ளை ஆகியவை உண்மையான இலக்குகளாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கனடா விசா நிறுத்தம் தொடர்பாக பஞ்சாப் எதிர்க்கட்சியான அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அகாலிதளத்தில் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரஜைகளாகவோ அல்லது அந்த நாட்டில் உள்ள மாணவர்களாகவோ வசிக்கும் லட்சக்கணக்கான பஞ்சாபியர்களைப் பாதித்துள்ளதால், கனேடிய குடிமக்களுக்கு இந்தியாவிற்கான #விசா சேவைகள் காலவரையின்றி நிறுத்தப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை ஏற்பட்டுள்ளது.

இது பஞ்சாபியர்களுக்கு பெரும் இடையூறுகளையும், நிச்சயமற்ற தன்மையையும், கவலையையும், குறிப்பாக நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டுமின்றி, எல்லைகளில் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடவும் இணையற்ற தியாகங்களைச் செய்த சீக்கியர்களின் மிகவும் தேசபக்தியுள்ள சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் இடையூறுகளை உருவாக்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment