Advertisment

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி; சொந்த ஊர் செல்ல உதவி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை டெல்லியின் சுக்தேவ் விஹாரில் குடியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “கடந்த வாரங்களில் பெரும் கஷ்டங்கள், வன்முறைகள் மற்றும் அநீதிகளை அனுபவித்த நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன் இந்தியாவின் ஆதரவற்ற ஹீரோக்களுடன் ஒரு உரையாடல்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahul gandhi interaction with migrants, rahul gandhi, congress, migrants plight, india lockdown, rahul gandhi, ராகுல் காந்தி, காங்கிரஸ், india coronavirus, india covid cases, india news, tamil indian express, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, சொந்த ஊர் செல்ல உதவி, Rahul Gandhi interaction with migrant workers, rahul gandhi video, rahul gandhi helps to migrants send back to their village

rahul gandhi interaction with migrants, rahul gandhi, congress, migrants plight, india lockdown, rahul gandhi, ராகுல் காந்தி, காங்கிரஸ், india coronavirus, india covid cases, india news, tamil indian express, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, சொந்த ஊர் செல்ல உதவி, Rahul Gandhi interaction with migrant workers, rahul gandhi video, rahul gandhi helps to migrants send back to their village

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை டெல்லியின் சுக்தேவ் விஹாரில் குடியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் உரையாடிய வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், “கடந்த வாரங்களில் பெரும் கஷ்டங்கள், வன்முறைகள் மற்றும் அநீதிகளை அனுபவித்த நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளுடன் இந்தியாவின் ஆதரவற்ற ஹீரோக்களுடன் ஒரு உரையாடல்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.

Advertisment

சுமார் 20 நபர்களைக் கொண்ட புலம்பெயர்ந்ந்த தொழிலாளர்கள் ஒரு குழுவாக, ஹரியானாவில் உள்ள தங்கள் பணியிடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தரபிரதேசம் மாநிலம் ஜானசிக்கு அருகிலுள்ள தங்கள் கிராமத்திற்கு நடந்து கொண்டிருந்தனர்.

இந்த வீடியோவில், ராகுல் காந்தி கூறுகையில், “கொரோனா வைரஸ் ஏராளமான மக்களுக்கு வலியைக் கொடுத்துள்ளது. அது நமது புலம்பெயர்ந்த சகோதர சகோதரிகளை கடுமையாக பாதித்துள்ளது. அவர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் மற்றும் உணவு இல்லாமல் நடந்தார்கள். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். ஆனால், அவர்கள் தங்கள் வீட்டை நோக்கி நடந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜான்சியில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளி மகேஷ் குமார் ராகுல் காந்தியிடம் கூறுகையில், “நாங்கள் ஏற்கனவே 150 கி.மீ தூரம் நடந்து வந்தோம். நாங்கள் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.” என்று கூறுகிறார்.

மற்றொரு புலம்பெயர்ந்த பெண் கூறுகையில், “பணக்காரர்கள் சிக்கலில் இல்லை. உண்மையான பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஏழைகள் நாங்கள்தான். நாங்களும் எங்கள் குழந்தைகளும்கூட கடந்த 3 நாட்களாக பசியுடன் இருக்கிறோம்.” என்று கூறுகிறார்.

பொதுமுடக்கம் பற்றி அவர்கள் எப்படி தெரிந்துகொண்டார்கள் என்று ராகுல் காந்தி அவர்களிடம் கேட்டபோது, ​​அவர்கள், “எங்களுக்கு திடீரென்று செய்தி கிடைத்தது. மார்ச் 21 அன்று, மார்ச் 22 அன்று ஊரடங்கு உத்தரவு இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனால், திடீரென்று இந்த பொதுமுடக்கம் நடைமுறைக்கு வந்தது. அரசாங்கம் எங்களுக்கு குறைந்தது 4 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். 2 மாதங்கள் காத்திருந்த பிறகு, நாங்கள் நடக்க முடிவு செய்தோம். ஏனென்றால், இப்போது எங்களிடம் எதுவும் இல்லை. பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எங்கள் வாடகை மாதம் ரூ.2500. எங்களிடம் ஒரு பைசா கூட இல்லை. நாங்கள் நடந்து கொண்டிருக்கிறோம். வழியில் யாராவது ஏதாவது கொடுத்தால், நாங்கள் சாப்பிடுகிறோம். நாங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறோம்." என்று கூறுகின்றனர்.

“கொரோனா வைரஸ் நோய் அவர்களுக்கு வலியைத் தரவில்லை. ஆனால், பசி வலியைத் தருகிறது. அரசாங்கம் எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று எங்களுக்கு கொஞ்சம் வேலை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று மற்றொரு தொழிலாளி ராகுல் காந்தியிடம் கூறினார்.

இந்த உரையாடலின் முடிவில், அவர்களின் வேண்டுகோளின் பேரில், புலம்பெயர்ந்தோர் தொழிலாளர்கள் குழு ஜான்சியில் உள்ள அவர்களுடைய கிராமத்திற்கு கார்கள் மற்றும் ஒரு மினி பஸ்ஸில் திரும்புவதற்கான ஏற்பாடுகளை ராகுல் காந்தி செய்கிறார்.

மே 17-ம் தேதி மதுரா சாலையில் ராகுல் காந்தியுடன் உரையாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை போலீசார் தடுத்து வைக்க முயன்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை டெல்லி காவல்துறை மறுத்தது. “ராகுல் காந்தி சில தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களிடம் பேசிவிட்டு வெளியேறினார். அப்போது உள்ளூர் காவல்துறையினர் வந்தார்கள். சில காங்கிரஸ் தொண்டர்களும் இருந்தனர். அவர்கள் தொழிலாளர்களை ஒரு காரில் அழைத்துச் செல்ல விரும்பினர். அனைவரையும் ஒரே காரில் நிறுத்த முடியாது என்றும் அவர்கள் சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் நாங்கள் அவர்களிடம் கூறினோம். அவர்களுக்கு அதிகமான கார்கள் கிடைத்தன. தொழிலாளர்கள் அந்த கார்களில் எஞ்சியிருந்தனர் ” என்று டெல்லி (தென்கிழக்கு) துணை போலீஸ் கமிஷனர் ஆர்.பி. மீனா கூறினார்.

மதுரா சாலையில் 1 மணி நேரம் ராகுல் காந்தி ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவினரை சந்தித்ததாக காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது. “பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 புலம்பெயர்ந்தோர் குழுவுடன் ஒரு மணிநேர சந்திப்பை அவர் மேற்கொண்டார். அம்பாலாவுக்கு அருகிலுள்ள தங்கள் பணியிடத்திலிருந்து ஜான்சிக்கு அருகிலுள்ள தங்கள் கிராமத்திற்கு நடந்து 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்து செல்ல வேண்டும். சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்கும் அதே வேளையில், டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தன்னார்வலர்கள் குழு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய கிராமத்திற்கு திரும்புவதற்கு உதவ வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.” என்று ராகுல் காந்தியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Video Delhi Rahul Gandhi All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment