Advertisment

ராகுல் காந்தியின் அழிவு அரசியல்; பாரத் ஜோடோ யாத்திரையில் கிடைத்த வெற்றி சரிவு

வெளிநாட்டு கவனத்தை நாடுவது ராகுல் காந்தியின் சொந்த உதவியற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் இளம் வாக்காளரிடம் அரிதாகவே எதிரொலிக்கிறது

author-image
WebDesk
New Update
ராகுல் காந்தியின் அழிவு அரசியல்; பாரத் ஜோடோ யாத்திரையில் கிடைத்த வெற்றி சரிவு

ராகுல் காந்தி (பி.டி.ஐ)

Neerja Chowdhury

Advertisment

146 நாள், 4000-கிமீ பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, ராகுல் காந்தியின் அடுத்த செயல்பாடுகள் திடமானதாகவும், முக்கியமானதாகவும் புதியதாகவும் இருக்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்க்கிறார்கள். அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாட்டிற்கான தனது பார்வையை முன்வைப்பது, இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக அவர் கருதும் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் கொண்டு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்குப் பதிலாக, இங்கிலாந்தில் சில இடங்களில் இருந்து பா.ஜ.க அரசாங்கத்தின் மீதான மற்றொரு நல்ல விமர்சனம் நமக்கு கிடைத்துள்ளது. தனது கருத்துக்களை தெரிவிக்க வயநாட்டில் உள்ள மகளிர் கல்லூரி? ஐ.ஐ.எம்? ஐ.ஐ.டி? டெல்லிக்கு அருகில் உள்ள பல்கலைக்கழகம்? என இந்தியாவில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தை, ராகுல் தேர்வு செய்திருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நரேந்திர மோடி 2013 இல் ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியில் இருந்து தன்னை இந்தியாவிற்கு அறிவித்தார்.

இதையும் படியுங்கள்: ஜெய் ஸ்ரீராம் கோஷம் போட்டபடி வந்து தாக்குதல்: காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் குழுவினர் புகார்

நிச்சயமாக, ராகுல் காந்திக்கு தனது கருத்தை தெரிவிக்க எந்த தளத்தையும் தேர்வு செய்ய உரிமை உண்டு, ஆனால் அதற்கு பிறகானவையும் முக்கியம்.

நரேந்திர மோடியின் முக்கிய எதிரியாக ராகுல் காந்தியை உலக சமூகத்தின் முன் வைக்க காங்கிரஸ் விரும்புகிறது, ராகுலை ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவராக முன்னிறுத்த விரும்புகிறது. இருந்தாலும் 2024 தேர்தலுக்குப் பிறகுதான் தலைமை பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்பதை மல்லிகார்ஜுன் கார்கே தெரியப்படுத்தினார். மற்ற பா.ஜ.க அல்லாத கட்சிகள் ராகுல் காந்தி இங்கிலாந்தில் தெரிவித்த கருத்துகளைப் பற்றி அதிகம் பேசவில்லை.

இந்தியாவில் ஜனநாயகம் சீரழிந்து வருவதாக கூறும் ராகுலின் கருத்து புதிதல்ல. வளர்ந்து வரும் "பற்றாக்குறை" அல்லது அதிகரித்து வரும் வேலையின்மை குறித்த அவரது கருத்துக்களும் பலரால் பகிர்ந்து கொள்ளப்படும் கவலைகள் தான். ஆனால், மேற்கத்திய ஜனநாயகங்கள் இந்தியாவில் ஜனநாயகப் பின்னடைவைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டி, அவர்களின் உதவியை நாடிய நிலையில், ராகுல் காந்தி சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அத்தகைய வேண்டுகோள், அது ஒரு அறிவார்ந்த புள்ளியை மட்டுமே பெறுவதாக இருந்தாலும், அது ஒரு நம்பிக்கையான தேசத்தின் தலைவருக்கு பொருந்தாது. நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடு தேடுவது தந்திரமான சொல்லாட்சி.

ஏனெனில், இது அவரது சொந்த உதவியற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும், முரண்பாடாக, யாத்திரையின் போது அவர் உருவாக்கிய சில அடித்தளங்கள், லட்சியத்தை அடைய போராடும் நிலை உள்ளிட்ட அவர் சம்பாதித்த அனைத்தையும் இழக்கச் செய்கிறது.

தேசப்பெருமை என்பது பா.ஜ.க கதையின் மையமாக இருக்கிறது என்பதை ராகுல் காந்தி கவனிக்காமல் இருக்க முடியாது. தேசப்பெருமையை பலரும் இன்று கையில் எடுத்துள்ளார்கள். அதன் பங்கில், வெளிநாட்டு மண்ணில் இருந்தபோது இந்தியாவை அவதூறு செய்ததாக ராகுல் காந்தி மீது பா.ஜ.க குற்றம் சாட்டியது.

இந்தியாவில் சுதந்திரமாக பேச ராகுலுக்கு உரிமை உள்ளது என்று கூறப்படும் ஒரு மெலிதான விமர்சனம், வெளிநாடு செல்லும் போது அந்த உரிமையை எப்படி பறிக்க முடியும்? வெளிநாட்டில் இருக்கும்போது விமர்சிக்க ராகுல் காந்தியின் உரிமையை கேள்வி எழுப்புவதன் மூலம், இந்தியா துடிப்பான ஜனநாயக நாடாகவே உள்ளது என்ற தனது சொந்தக் கூற்றை பா.ஜ.க குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்தும் போது, ​​"வெளிநாட்டு மண்ணில்" நாடுகள் ஒன்றையொன்று அழைக்கும் போது சிக்கலானது. ஆனால் ராகுல் காந்தி சொன்னவற்றில் மட்டும் பிரச்சனை இல்லை. அதுவும் அவர் சொல்லாத விஷயங்களும் பிரச்சனை தான்.

தெருவில் உள்ளவர்களிடம் பேசுங்கள், யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தியைப் பற்றி ஒரு பாசிட்டிவிட்டி இருக்கிறது. மக்கள் உங்களிடம், "நன்றாக செயல்படுங்கள்" என்று கூறுகிறார்கள். அதேநேரம் அவர் போட்டியை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்கிறார் என்பதை பார்க்க அவர்கள் காத்திருக்கிறார்கள் என்றும் மதிப்பீடு செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். "இன்னும் உறுதியாகத் தெரியவில்லை." அதனால்தான், ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பிந்தைய செயல்பாடுகள் வழக்கத்தை விட இன்று அதிக ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்றன.

ஒரு பர்னிச்சர் கடை உரிமையாளர், ஒரு டீ வியாபாரி, உ.பி. மற்றும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள், காய்கறி கடையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஹரியானா விவசாயி எனப் பலதரப்பட்டவர்களிடம் பேசியதில் இது தெளிவாகத் தெரிந்தது.

இது குறித்து டீக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே நான் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்து வருகிறேன்... காங்கிரஸில் ஏதோ குறை இருக்கிறது, அவர்கள் தங்கள் வழியில் வேலை செய்வதை காட்டட்டும், தேர்தலில் வெற்றி பெறட்டும்”, என்று கூறினார். ஒரு ஓய்வுபெற்ற IB அதிகாரி நிலைமையை சுருக்கமாகக் கூறினார்: “கேம்பிரிட்ஜ் பேச்சு சுவாரஸ்யமாக இருக்கலாம், ஆனால் 2024 இல் அது அவருக்கு உதவுமா? அவரது இங்கிலாந்து பேச்சுகளைப் பாராட்டுபவர்கள் எப்படியும் தீவிர பா.ஜ.க எதிர்ப்பு வாக்காளர்கள், பழைய உயரடுக்கின் ஒரு பகுதி. அவரது யாத்திரையில் கிடைத்த வெளிச்சத்தின் அளவுக்கு அவரது பேச்சு எதிரொலித்த மிதவாத பா.ஜ.க வாக்காளர் யாராவது இருக்கிறார்களா?”

அது தான் முக்கிய பிரச்சினை. 2019-ல் 19.5% பெற்ற காங்கிரஸின் அடிப்படை வாக்குகளையோ அல்லது காவி கட்சிக்கு உறுதியாக இருக்கும் அடிப்படை பா.ஜ.க வாக்காளரையோ ஒரு கணம் மறந்துவிடுங்கள். மிதவாத, வேலியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க வாக்காளரை ராகுல் காந்தியால் விரட்ட முடியுமா? இதை எந்த கதை சாத்தியப்படுத்தும்? இங்கிலாந்திற்குச் செல்வதற்கு முன், அவர் மல்லிகார்ஜூன் கார்கேவை தன்னுடைய கருத்தில் சேரச் சொன்னாரா, அவர் தலைவர் மற்றும் உயர்மட்ட தலைமைக் குழுவை அழைத்து இந்த நேரத்தில் இங்கிலாந்தில் உள்ள பார்வையாளர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று அவர்களுடன் கலந்தாலோசனை செய்தாரா?

இந்தியாவின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை இந்த யாத்திரை எவ்வாறு அளித்தது என்பதையும், முன்னேற்றம் என்பது சமூகப் பிளவைக் குறிக்காத இந்தியாவுக்கான தனது யோசனைக்கு எவ்வாறு வடிவம் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்பதையும் ராகுல் காந்தி குறிப்பிட வேண்டும் என்று கட்சியில் பலர் விரும்பினர்.

ஆனால் அவர் தனது செய்தியை மோசமான தொனியில் உருவாக்குகிறார்: ஜனநாயகம் இறந்துவிட்டது, அனைத்து நிறுவனங்களும் கைப்பற்றப்பட்டன, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்தது, அனைத்து நிறுவனங்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன, வேலையின்மை, பசியின்மை அதிகரித்து வருகிறது என்று கூறுகிறார். இது லட்சிய இந்தியாவை உற்சாகப்படுத்தும், ஊக்கமளிக்கும் என்று அவர் நினைக்கிறாரா? ஒரு இளம் நாட்டிற்கு இருளை மட்டும் காட்டாமல் ஒளியைக் காட்ட வேண்டும். அவரது ஆலோசகர்கள் 2014 மற்றும் 2019 இல் அவர் ஆற்றிய உரைகளின் முக்கிய மேற்கோள்களை வெளியே இழுத்து, அவரது விரக்தி அரசியல் ஏன் அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கவில்லை என்பதைக் காட்ட வேண்டும்.

ஆச்சரியப்படும் விதமாக, இங்கிலாந்தில் சிலர் அவரிடம் கேட்டனர்: இந்தியா தவறான பாதையில் செல்கிறது என்று நீங்கள் நம்பினால், இந்தியாவின் தவறு என்னவென்று உங்களுக்குத் தெரிந்தால், ஏன் உங்களால் இந்த பிரச்சனைகளை வாக்காளரிடம் கொண்டு செல்ல முடியவில்லை? ஒவ்வொரு தேர்தலிலும் ஏன் தோற்கிறீர்கள்? இறுதியில், ராகுல் காந்தி அந்தக் கேள்வியை தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும், எந்த அரசியல் தத்துவமும் இதை விளக்காது.

(நீர்ஜா சௌத்ரி, பங்களிப்பு ஆசிரியர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், கடந்த 10 மக்களவைத் தேர்தல்கள் குறித்து எழுதியவர்)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment