ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி (யூடியூப் வீடியோ)
புத்தாண்டு நெருங்கி வருவதையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ஆரஞ்சு மார்மலேட் தயாரிப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தனர். தாய்-மகன் இருவரும் சமையலறை தோட்டத்தில் இருந்து புதிய பழங்களை பறித்து உணவு தயாரிக்கும் வீடியோ, புத்தாண்டு தினத்தன்று ராகுல் காந்தியின் யூடியூப் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், “பா.ஜ.க.,வுக்கு ஜாம் வேண்டுமானால், அவர்களுக்கும் தருகிறோம்” என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுவதைக் கேட்கலாம். அதற்கு பதிலளித்த சோனியா காந்தி, பா.ஜ.க அதை நம் மீது வீசும் என்று கிண்டல் செய்தார். "அது நல்லது, நாம் அதை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்" என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.
தாய்-மகன் இருவரும் ஆரஞ்சு பழங்களை சுத்தம் செய்வதும், இலைகளை அகற்றுவதும், நறுக்குவதும் வீடியோவில் உள்ளது. ஜாம் கிளறும்போது, ராகுல், இது தனது சகோதரி பிரியங்கா காந்தியின் செய்முறை என்றும், தனது தாயாருக்கு பிடித்த ஜாம் என்றும் கூறுகிறார்.
வீடியோவின் முடிவில் உணவின் அரசியலைப் பற்றி குறிப்பிட்ட ராகுல் காந்தி, “ஒரு பெரிய அளவிலான அரசியல் சண்டை உணவைப் பற்றியது. காந்திஜிக்கு உணவைப் பற்றி ஒரு குறிப்பிட்ட பார்வை இருந்தது. சைவம், ஆட்டு பால் மற்றும் அவருக்கு ஊட்டச்சத்து யோசனைகள் இருந்தன. காந்திஜியின் கருத்துகளை விட சற்றே வித்தியாசமான ஊட்டச்சத்து யோசனைகள் என்னிடம் உள்ளன,” என்று கூறினார்.
அந்த வீடியோவில், சோனியா காந்தி இந்திய உணவுகளுடன் எப்படி அட்ஜஸ்ட் செய்துகொண்டார் என்பது பற்றி பேசுகிறார். “ஒரு இந்தியர் வெளிநாடு செல்லும்போது. இன்று நான் பேசவில்லை, ஏனென்றால் எல்லா இடங்களிலும் இந்திய உணவகங்கள் உள்ளன, இங்கிலாந்தில் அல்லது வேறு இடங்களில் உள்ள உணவுகளை உங்களால் அட்ஜஸ்ட் செய்ய முடியாது. இதேபோல், நான் இங்கு வந்தபோது, இந்திய சுவைகளுடன், குறிப்பாக மிளகாயை ஏற்றுக் கொள்ள எனக்கு நேரம் பிடித்தது,” என்று சோனியா காந்தி கூறுகிறார்.
சோனியா காந்தி உணவில் அட்ஜஸ்ட் செய்ய நேரம் எடுத்ததாக ராகுல் காந்தி கூறுகிறார். முன்பு அவருக்கு பச்சை கொத்தமல்லி பிடிக்காது, ஆனால் இப்போது பிடிக்கும், என்று ராகுல் கூறுகிறார். சோனியா காந்தி கூறுகையில், "இது எனக்கு சிறிது நேரம் எடுத்தது, ஆனால் இப்போது நான் அதை விரும்புகிறேன். நான் வெளிநாடு செல்லும்போது முதலில் சாப்பிடுவது ‘அர்ஹர் கி டால்’ மற்றும் அரிசி,” என்று கூறினார்.
சோனியா காந்தியின் தாய் வீட்டில் சிறந்த சமையல்காரராக இருந்ததாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். பின்னர், சோனியா காஷ்மீரி உறவினர்களிடமிருந்து இந்திய உணவுகளை சமைக்க கற்றுக்கொண்டார்.
"ராகுலைப் பற்றி உங்களுக்கு எரிச்சலூட்டும் ஒரு விஷயம் என்ன?" என்ற கேள்விக்கு ஒரு இலகுவான குறிப்பில் பதிலளித்தார். சோனியா கூறுகிறார், "அவர் என்னைப் போலவே பிடிவாதமானவர்." சோனியா காந்தியும் அவர் மிகவும் பாசமாக இருப்பதாகவும், பிரியங்காவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது அவரையும் நன்றாக கவனித்துக்கொள்வதாகவும் கூறினார்.
“மார்மலேட் என்பது சர்க்கரை மற்றும் தண்ணீருடன் வேகவைத்த சிட்ரஸ் பழங்களின் சாறு மற்றும் தோலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பழக்கூழ். நன்கு அறியப்பட்ட கசப்பான ஆரஞ்சில் இருந்து தயாரிக்கப்பட்டது" என்று வீடியோவில் உள்ள உரை கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“