Advertisment

அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி : உண்மையை பேசியதற்கான விலை' என பேட்டி

ராகுல்காந்தி தனது காலி செய்ததை தொடர்ந்து அந்த பங்களாவின் சாவி மக்களவைச் செயலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பங்களாவை காலி செய்ய ஏப்ரல் 22 கடைசி நாளாகும்.

author-image
WebDesk
New Update
rahul-gandhi

ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் கேரளா மாநிலம் வயாநாடு தொகுதியில் எம்பியுமான ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ராகுல்காந்தி துக்ளக் லேன் 12ல் உள்ள தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்துள்ளார். மேலும் "உண்மையை பேசியதற்கு தான் கொடுத்த விலை" என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் கூறுகையில், இந்துஸ்தான் மக்கள் இந்த வீட்டை 19 ஆண்டுகளாக எனக்குக் கொடுத்திருக்கிறார்கள், அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஆனால் அந்த வீடு என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. இப்போதெல்லாம் உண்மையைப் பேசுவதற்கு ஒரு விலை இருக்கிறது. உண்மையைப் பேசுவதற்கு நான் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து வீட்டைக் காலி செய்த பிறகு அவர் எங்கு தங்குவார் என்று கேட்டபோது, “நான் முன்னாள் காங்கிரஸ் தலைவர் (சோனியா காந்தி) இல்லத்தில் சிறிது காலம் தங்கியிருப்பேன், பின்னர் நாங்கள் வேறு இடம் தேடுவோம் என்றும் கூறியுள்ளார். ராகுல்காந்தி தனது காலி செய்ததை தொடர்ந்து அந்த பங்களாவின் சாவி மக்களவைச் செயலகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பங்களாவை காலி செய்ய ஏப்ரல் 22 கடைசி நாளாகும்.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் வீட்டில் இருந்து தனது பொருட்களை வெளியே சென்றார். தற்போது, தனது தாய் சோனியா காந்தியுடன் வசித்து வரும் ராகுல்காந்தி வேறு வீடு தேடி வருகிறார். இதனிடையே ராகுல் காந்தி பங்களாவை காலி செய்தது ஒரு முன்மாதிரியான செயல் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறினார்.

“லோக்சபா செயலகத்தின் உத்தரவை ஏற்று இன்று ராகுல் காந்தி துக்ளக்லேனில் உள்ள தனது வீட்டை காலி செய்தார். மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்தது. ஹைக்கோர்ட் அல்லது சுப்ரீம்கோர்ட் இன்னும் அவரை மீண்டும் பணியில் அமர்த்தலாம், ஆனால் அவர் வெளியேறும் நடவடிக்கை முன்மாதிரியான சைகை விதிகளுக்கு அவர் மதிப்பளிப்பதைக் காட்டுகிறது. என்று தரூர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாவை காலி செய்ய சம்மதித்து லோக்சபா செயலகத்திற்கு ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 4 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்த நான், எனது காலத்தின் இனிய நினைவுகளுக்கு மக்களின் ஆணையாக கடமைப்பட்டுள்ளேன். "எனது உரிமைகளுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல், உங்கள் கடிதத்தில் உள்ள விவரங்களை நான் நிச்சயமாக கடைப்பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.

எம்.பி.யாக இருந்த காந்தி கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். மார்ச் 23 அன்று, சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. இதனால் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் இது தொடர்பாக அவர் சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை சவால் செய்தார், இது தண்டனையை ரத்து செய்ய அவர் செய்த மேல்முறையீட்டை நிராகரித்தார்.

செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அடுத்த வாரம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment