7 பேர் விடுதலை குறித்து இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் : ராஜபக்சே பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chandrayaan 2 live

chandrayaan 2 live

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

Advertisment

ராஜபக்சே பேட்டி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைக்குள் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர்களின் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்ந்நிலையில் டெல்லியில் நடைபெற இருக்கும் விராட் இந்துஸ்தான் சங்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்தார் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே. அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisment
Advertisements

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் அவர்களை தண்டித்தோம். ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

விராட் இந்துஸ்தான் சங்க நிகழ்ச்சியில், இந்தியா - இலங்கை உறவு குறித்து அவர் பேசவுள்ளார். பின்னர் அவர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Delhi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: