/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-14T161325.170.jpg)
Ashok Gehlot for trust vote: ராஜஸ்தான் மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையிலிருந்து காத்து, பாதுகாவலர்களாக மாறி, அரசை பாதுகாப்போம் என்று துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அரசியலில் கடந்த ஒரு மாதமாக வீசி வந்த புயல் திங்கட்கிழமை சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதுடன் ஓய்ந்தது. இருப்பினும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதலமைச்சர் அசோக் கெலாட் உறுதியாக உள்ளார். இந்த சூழலில் பேரவை இன்று கூடியபோது, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடிய போது பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் சாந்தி குமார் தாரிவால் அரசின் மீது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்வைத்தார். தொடந்து இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us