/indian-express-tamil/media/media_files/2025/03/04/GN04a9J493v24xxkMHMB.jpg)
ராஜீவ் சந்திரசேகர் ஒரு பேஸ்புக் பதிவில், பல மலையாளிகள் தனக்கு, இந்த நிகழ்ச்சி தங்களை காயப்படுத்தியதாகக் கூறி செய்தி அனுப்பியதாக ராஜீவ் சந்திரசேகர் கூறினார். (X/Rajeev Chandrasekhar)
பா.ஜ.க தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், தனக்குச் சொந்தமான மலையாள தொலைக்காட்சி சேனலான ஏசியாநெட் நியூஸ் ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் மகா கும்பமேளா குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு எதிராகப் பேசியுள்ளார்.
செவ்வாயன்று ஒரு பேஸ்புக் பதிவில், சந்திரசேகர், "ஒவ்வொரு இந்துவுக்கும் நம்பிக்கை முக்கியம்" என்று சேனலின் உயர் அதிகாரிகளுக்கு நினைவூட்டினார்.
மார்ச் 1-ம் தேதி ஒளிபரப்பான வாராந்திர நிகழ்ச்சியான கவர் ஸ்டோரியின் சமீபத்திய எபிசோடில், ஏசியாநெட் நியூஸ், கேரளாவைச் சேர்ந்த மக்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடியதை வெளிப்படையாகக் குறை கூறியது.
“கேரளாவிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் கங்கையில் புனித நீராடுதலில் பங்கேற்றனர். இதுவரை பரவலாக இல்லாத இந்து உணர்வுகள், சடங்குகளில் ஆர்வம் மற்றும் கும்பமேளா நீராட ஆகியவை சி.பி.ஐ (எம்) ஆளும் ஒரு மாநிலத்தில் வெளிப்பட்டுள்ளன. கேரளா 100 சதவீதம் கல்வியறிவு பெற்றதாகக் கூறினாலும், கும்பமேளாவில் நீராடுதல் மற்றும் பா.ஜ.க-வை ஆதரிப்பது பல கேரள மக்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாகும்” என்று அது கூறியது.
பிரதமர் நரேந்திர மோடி கங்கையில் நீராடும் காட்சிகளைக் காட்டி, "நல்ல விளம்பரம், நல்ல வணிகம் மற்றும் நல்ல மக்கள் தொடர்பு. அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தபோது, கேரளாவிலும் கும்பமேளா மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த நிகழ்ச்சி தங்களை காயப்படுத்தியதாக பல மலையாளிகள் தனக்கு செய்தி அனுப்பியதாக சந்திரசேகர் ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். “இந்த நிகழ்ச்சி கும்பமேளாவை கேலி செய்வதாக அவர்கள் உணர்ந்தனர். மகா கும்பமேளாவில் பங்கேற்ற கோடிக்கணக்கான பக்தர்களில் என் குடும்பமும் இருந்தது. இதை ஏசியாநெட் நியூஸின் தலைமையில் இருப்பவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் இதுபோன்ற நிகழ்வைப் பற்றி இதுபோன்ற கவனக்குறைவான, கிண்டலான கருத்துக்கள் இருக்கக்கூடாது என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். எந்த மதத்தையும் போலவே, ஒவ்வொரு இந்துவுக்கும் நம்பிக்கை முக்கியம். கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்கள் அதை மதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் எழுதியுள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் திங்கள்கிழமை இந்த நிகழ்ச்சியை விமர்சித்தார். “டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்ட நிதியையும், சோரோஸ் நிதியையும் மலையாள ஊடகங்களும் பெறுகின்றன. மெக்காவில் ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளை கணக்கிட முடியாது. கும்பமேளாவுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையைப் பற்றியதுதான் கவலை. முதல் தர நகர்ப்புற நக்சல்கள், அவர்களின் ஆதரவுக்கு ஜிஹாதி பணம் உள்ளது”என்று அவர் பேஸ்புக்கில் எழுதினார்.
2006 ஆம் ஆண்டு ஏசியாநெட், ஏசியாநெட் நியூஸ் மற்றும் ஏசியாநெட் பிளஸ் ஆகிய சேனல்களில் சந்திரசேகர் பங்குகளை வாங்கிய பிறகும், கேரளாவில் பா.ஜ.க கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் ஏசியாநெட் நியூஸுடன் மோதியுள்ளது.
2015-ம் ஆண்டில், பா.ஜ.க கேரளா மாநிலப் பிரிவு ஏசியாநெட் நியூஸைப் புறக்கணிப்பதாக அறிவித்தது, அந்த சேனலில் “இடதுசாரி பின்னணி கொண்ட பத்திரிகையாளர்கள்” ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி, 2021-ம் ஆண்டில், மத்திய அமைச்சரும் கேரள பா.ஜ.க மூத்த தலைவருமான வி. முரளீதரன் தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஏசியாநெட் நியூஸின் நிருபர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்த செய்தி கவரேஜ்க்காக பா.ஜ.க மலையாள சேனலைப் புறக்கணிப்பதாகக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.