/tamil-ie/media/media_files/uploads/2018/05/rajiv-gandhi-7591.jpg)
rajiv-gandhi-7591
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27வது நினைவு தினம் இன்று. இவர் கடந்த 1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இளம் வயதிலேயே இந்திய நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்த முதல் இளைஞர் இவர். ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி, அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து டெல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மே 21ம் தேதியான இன்று ராஜீவ் காந்தியின் நினைவு நாளில், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அவரின் அறியப் புகைப்படங்களை தொகுப்பாக்கி உங்களுக்கு அளிக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.