/indian-express-tamil/media/media_files/vfKZIISfR7dqvg3CJSw0.jpg)
அயோத்தியில், ராமர் கோயிலின் கர்ப்ப கிரகத்தில், வைக்கப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார்.
இந்த குழந்தை ராமர் சிலை கிருஷ்ண ஷிலா என்ற கருப்பு கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சேர்ந்த 15 பேரில் 11 பேர் இந்த சிலையைத்தான் தேர்வு செய்ததாக அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “ மைசூரை சேர்ந்தவர் அருண் யோகிராஜ். இவர் பரம்பரையாக சிறபங்களை செய்யும் தொழிலை செய்து வருகிறார்கள். இந்த சிலையை செதுக்கிய 15 முதல் 20 நாட்கள் வரை இவர் கைபேசியை பயன்படுத்தவில்லை. இந்த நாட்களில் அவரது குழந்தைகளுடன் கூட அவர் பேசவில்லை. தான் செய்யும் பணியில் மிகவும் கனவம் செலுத்தினார். இவர் செய்த சிலைதான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவரது உழைப்பை அனைவரும் பாராட்டினார்கள்” என்று அவர் கூறினார்.
51 இஞ்ச் குழந்தை ராமர் சிலை செதுக்குவதற்கு 3 சிற்பிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் யோகிராஜ்-ம் ஒருவர். இந்த சிலையில் குழந்தை ராமர் 5வயதில் நிற்கும் கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறபங்களை யோகிராஜ் மற்றும் கணேஷ் பட் செதுக்கி உள்ளனர். இவை கருப்பு கல்லில் செதுக்கப்பட்டது. சத்ய நாராயணன் பாண்டே 3 வது சிலையை செதுக்கினார். இது முற்றிலும் வெள்ளை நிறத்தில் உள்ளது.
சம்பத் ராய் கூறுகையில் “ கடந்த 71 ஆண்டுகளாக வழிப்பட்டு வரும் சிற்பமும் கர்ப்ப கிரகத்தில் வைக்க உள்ளோம். இத்துடன் புதிய சிற்பமும் இடம் பெரும். ஜனவரி 22ம் தேதிக்கு பிறகு கடவுள் சிற்பத்தை இதுபோலவே வழிப்படும் முறை தொடரும்” என்று கூறினார்.
புதிதான செதுக்கப்பட்ட குழந்தை ராமரின் சிலை 150 முதல் 200 கிலோ இடை உடையது. இந்த சிலை ஜனவரி 17ம் தேதி புதிய கோவிலுக்குள் கொண்டு செல்லப்படும். அடுத்த நாளில் இந்த சிலை கர்ப்ப கிரகத்தில் வைக்கப்படும். பிராண பிரதிஷ்டை, இன்று முதல் தொடங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறும்.
ராமர் கோவிலில் நடைபெறும் பிராண பிரதிஷ்டை ஜனவரி 22 ம் தேதி மதியம் 12.20 மணிக்கு தொடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.