Advertisment

ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தமிழ்நாடு தம்பதி உள்பட 15 தம்பதிகள் ‘யஜமான்களாக’ அமர்ந்து பூஜை

ஆர்.எஸ்.எஸ் தலைவர் அனில் மிஸ்ராவும் அவரது மனைவி உஷாவும் ‘பிரதான் யஜ்மான்’ ஆவர்.

author-image
WebDesk
New Update
Yajman.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் நாளை (ஜன.22) கும்பாபிஷேகம் செய்யப்பட்ட திறக்கப்படுகிறது. குழந்தை ராமர் (ராம் லல்லாவின்) சிலைக்கு  “பிரான் பிரதிஷ்டை” செய்யப்பட்டு திறக்கப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில் நாடு முழுவதிலுமிருந்தும் பல்வேறு சமூகம் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 15 தம்பதிகள் “யஜமான்கள்”  கடமையைச் செய்வார்கள். தம்பதிகளில் தலித், பழங்குடியினர், ஓ.பி.சி (யாதவ் உட்பட) மற்றும் பிற சமூகங்களை சேர்ந்த தம்பதிகளும் இடம்பெறுகின்றனர். 

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சனிக்கிழமையன்று 14 பெயர்களின் பட்டியலை வெளியிட்டது.  மற்றொரு தம்பதியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸ், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், இந்த தம்பதிகள், யாகம் செய்வர்.

14 பேர் கொண்ட பட்டியலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பான வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவர் ராமச்சந்திர காரடி இடம் பெற்றுள்ளார். பழங்குடி சமூகத்தில் இருந்து வரும் கரடி, உதய்பூரை சேர்ந்தவர். 

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த 3 தம்பதிகள் யஜமான்களாக பூஜை செய்கின்றனர்.  அவர்களில் அனில் சௌத்ரி, காசியின் டோம் ராஜா ஆகியோர் அடங்குவர். வாரணாசியில் உள்ள மணிகர்ணிகா மற்றும் ஹரிசச்சந்திரா காட்களில் பல தலைமுறைகளாக பைர்களை ஏற்றி வைப்பதற்கு டோம்ஸ் பொறுப்பாக உள்ளது. 

அவர்கள் தங்களை "புராண மன்னர் காலூ டோமின் மரபின் வாரிசு" என்றும் கூறுகின்றனர். கைலாஷ் யாதவ் மற்றும் கவீந்திர பிரதாப் சிங் என்பது வாரணாசியைச் சேர்ந்த மற்ற இரண்டு பெயர்கள்.

அசாமைச் சேர்ந்த ராம் குய் ஜெமி, சர்தார் குரு சரண் சிங் கில் (ஜெய்ப்பூர்), கிருஷ்ண மோகன் (ஹர்தோய், ரவிதாசி சமாஜிலிருந்து), ரமேஷ் ஜெயின் (முல்தானி), ஆடலரசன் (தமிழ்நாடு), விட்டல்ராவ் காம்ப்ளே (மும்பை), மகாதேவ். ராவ் கெய்க்வாட் (லத்தூர், குமந்து சமாஜ் அறங்காவலர்), லிங்கராஜ் வாசவராஜ் அப்பா (கர்நாடகாவில் கலபுராகி), திலீப் வால்மீகி (லக்னோ), மற்றும் அருண் சவுத்ரி (ஹரியானாவில் பல்வால்) ஆகியோரும் இந்த பூஜையை செய்கின்றனர். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/15-couples-from-across-india-to-be-yajmans-for-pran-pratishtha-9119597/

ஆர்.எஸ்.எஸ் தலைவர் அனில் மிஸ்ரா, அமைப்பின் அவத் பிரிவைச் சேர்ந்தவர் மற்றும் மனைவி உஷா ஆகியோர் "பிரதான் யஜ்மான்" (பிரதான புரவலர்கள்) அவர்கள் பிரதிஷ்டை நிகழ்வுக்கு வழிவகுக்கும் சடங்குகளை செய்வார்கள். 2020-ல் கட்டுமானத்தை மேற்பார்வையிட உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் 15 அறங்காவலர்களில் மிஸ்ராவும் ஒருவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

     

    RamTemple
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment