Advertisment

ராமர் கோவில் பூமி பூஜை: அயோத்தியில் பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முழு விவரம்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெற உள்ள  ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.பிரதமர் மோடி நகரில் மூன்று மணி நேரம் செலவிடுவார், அந்த நேரத்தில் அவர் அனுமன் காரி கோயிலையும் பார்வையிடுவார்.

author-image
WebDesk
New Update
. ayodhya ram temple, ayodhya temple bhumi pujan, ayodhya temple bhumi pujan news, ayodhya news, indian express

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெற உள்ள  ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.பிரதமர் மோடி நகரில் மூன்று மணி நேரம் செலவிடுவார், அந்த நேரத்தில் அவர் அனுமன் காரி கோயிலையும் பார்வையிடுவார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஆக.05) அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ) வெளியிட்ட பயண அறிக்கையின் படி, பிரதமர் மோடி நகரில் மூன்று மணி நேரம் செலவிடுவார், அந்த நேரத்தில் அவர் அனுமன் காரி கோயிலையும் பார்வையிடுவார்.

பிரதமர் மோடி காலை 11.30 மணியளவில் கோயில் நகரத்திற்கு வந்து நிகழ்வு முடிந்தவுடன் மதியம் 2 மணியளவில் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலக பொறுப்பாளர்கள் தவிர, அழைக்கப்பட்டவர்களில் நாடு முழுவதும் 36 ஆன்மீக மரபுகளைச் சேர்ந்த 135 மதத் தலைவர்கள் உள்ளனர்.

நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அறக்கட்டளைத் தலைவர் நிருத்யா கோபால்தாஸ் மகாராஜ், உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ஐந்து பேர் மட்டுமே நிகழ்வில் இருப்பார்கள்.

‘டைம் கேப்ஸ்யூல்கள்’: அதில் என்ன இருக்கிறது, எப்படி வைக்கப்பட்டது?

அயோத்தியில் பிரதமர் மோடியின் பயண விவரம், முழு அட்டவணை இங்கே:

டெல்லியில் இருந்து காலை 9:35 மணிக்கு புறப்படுகிறார்

காலை 11:30 மணிக்கு அயோத்தியை அடைவார்

விழாவிற்கு முன்பு, ஹனுமன்காரியில் பூஜை மற்றும் தரிசனத்தில் பிரதமர் பங்கேற்பார், அங்கு அவர் ஏழு நிமிடங்கள் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது

பின்னர் அவர் ஸ்ரீ ராம் ஜன்மபூமிக்குச் செல்வார், அங்கு அவர் ‘பகவான் ஸ்ரீ ராம்லாலா விராஜ்மான்’ பூஜை மற்றும் தரிசனத்தில் பங்கேற்பார்.

பின்னர் அவர் ஒரு பரிஜத் மரக்கன்றை நடவு செய்து பின்னர் பூமி பூஜை செய்வார். பூமி பூஜைக்கு தூய வெள்ளியால் செய்யப்பட்ட 22.6 கிலோ செங்கல் பயன்படுத்தப்படும் என்று அயோத்தியில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெய்ன் கோட் என பி.பி.இ. ஆடையை திருடிய நபருக்கு கொரோனா!

பிரதமர் மோடி பின்னர் அடிக்கல் நாட்டப்பட்டதைக் குறிக்கும் ஒரு தகடு ஒன்றை வெளியிடுவார், மேலும் ‘ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திர்’ குறித்த நினைவு தபால்தலையும் வெளியிடுவார்.

மதியம் 2:20 மணிக்கு லக்னோவுக்கு புறப்படுகிறார்.

செவ்வாய்க்கிழமை காலை அயோத்தியில் ஹனுமனை வணங்கியதன் மூலம் பிரார்த்தனைகளும் விழாவும் தொடங்கியது - அனுமன் நகரத்திற்கு தலைமை தாங்குவார் என்று நம்பப்படுகிறது.

புதன்கிழமை திட்டத்திற்குப் பிறகு கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும், மேலும் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்தில் கட்டிடம் தயாராக இருக்கும் என்று அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment