Deeptiman Tiwary
2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நரேந்திர மோடிக்கு விசா அனுமதிக்காக வற்புறுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர், இண்டியானாவில் உள்ள நோக்கியா பெல் ஆய்வகத்தில் மூத்த ஆராய்ச்சியாளர், நார்வே எம்.பி, நியூசிலாந்து விஞ்ஞானி, ஃபிஜி தொழிலதிபர் மற்றும் கரீபியனில் இந்து பள்ளிகளை நிறுவிய புனிதர்கள். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சர்வதேச விருந்தினர்களில் இவர்களும் அடங்குவர்.
ஆங்கிலத்தில் படிக்க: Ram Temple inauguration: Doctor who lobbied for US visa to Modi among 100-odd foreign guests
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா உட்பட 53 நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் இந்த நிகழ்விற்கான VHP விருந்தினர் பட்டியலில் உள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான அழைப்புகள், விருந்தினர் பட்டியலில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து 5 பேரும், தென் கொரியா, மலேசியா மற்றும் இங்கிலாந்தில் இருந்து தலா மூன்று பேரும், ஜெர்மனி மற்றும் இத்தாலியில் இருந்து தலா இரண்டு பேரும் அழைக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளில் தலா ஒரு அழைப்பாளர் உள்ளனர்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடியின் விசாவை அனுமதிக்குமாறு அமெரிக்க அரசாங்கத்துடன் வற்புறுத்திய டாக்டர் பாரத் பராய் முக்கிய விருந்தினர்களில் ஒருவர். அதுவரை, மோடி அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட 10 ஆண்டு விசா தடையை எதிர்கொண்டார்.
பா.ஜ.க.,வின் தீவிர ஆதரவாளரான டாக்டர் பராய் அமெரிக்காவில் உள்ள தனது இல்லத்தில் பல கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்துள்ளார். இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் அவர் பணியாற்றியுள்ளார்.
"நாங்கள் மற்ற நாடுகளிலிருந்தும் முக்கிய அதிகாரிகளை அழைக்க விரும்பினோம். சில சந்தர்ப்பங்களில், பிரதமர்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களின் மூத்த பிரமுகர்கள் பட்டியலில் இருந்தனர். இருப்பினும், அத்தகைய விருந்தினர் பட்டியலுக்குத் தேவையான பாதுகாப்பு நெறிமுறையைக் கருத்தில் கொண்டு மத்திய நிர்வாகம் அதற்கு எதிராக அறிவுறுத்தியது. அத்தகைய உயரதிகாரிகளுக்கு ஒரு தனி வருகை பின்னர் ஏற்பாடு செய்யப்படும்,” என்று வி.எச்.பி.,யின் இணைப் பொதுச் செயலாளர் சுவாமி விக்யானந்த் கூறினார்.
விக்யானானந்த் VHP இன் சர்வதேச விவகாரங்களைக் கையாளுகிறார் மற்றும் உலக இந்து அறக்கட்டளையின் உலகளாவிய தலைவராக உள்ளார். விக்யானானந்தின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மத்தியில் இந்த நிகழ்வைப் பற்றி கணிசமான உற்சாகம் இருந்தது. வெளி நாடுகளில் உள்ள பல முக்கிய அரசுப் பதவிகளில் இருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து வி.எச்.பி.,யை அணுகினர், ஆனால் அவர்கள் பணிவுடன் நிராகரிக்கப்பட்டனர், என்று கூறினார்.
அமெரிக்காவிலிருந்து மற்றொரு முக்கிய அழைப்பாளர் டாக்டர் அபய் அஸ்தானா, இண்டியானாவில் உள்ள நோக்கியா பெல் லேப்ஸ்-சி.டி.ஓ.,வின் மூத்த ஆராய்ச்சியாளர் ஆவார், இவர் அமெரிக்காவின் விஸ்வ ஹிந்து பரிஷத் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் உலக இந்து கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.
முன்னதாக நார்வே பிரதமரின் அலுவலகத்தில் பணியாற்றிய முன்னேற்றக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நார்வே நாடாளுமன்ற உறுப்பினர் ஹிமான்ஷு குலாட்டி, ஸ்காண்டிநேவியாவில் இருந்து இந்து சமூகத்தின் முக்கிய பிரதிநிதியாக இருப்பார், மேலும் நியூசிலாந்து விஞ்ஞானியும் நியூசிலாந்தின் இந்து கவுன்சிலின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பேராசிரியர் குணா மகேசன், ஆகிய இருவரும் இந்த விழாவில் இந்திய புலம்பெயர்ந்தோரை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.
குறிப்பிடத்தக்க இந்திய புலம்பெயர்ந்தோரைக் கொண்ட ஃபிஜி, நாட்டின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரான ஜெய் தயாள் பங்கேற்பைக் காணும்.
இவர்களைத் தவிர, இங்கிலாந்தில் உள்ள இந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவர் தீரஜ் பாய் ஷா; ஜெர்மனியில் இருந்து மூத்த VHP தலைவர்கள் ரமேஷ்பாய் ஜெயின் மற்றும் இத்தாலியில் இருந்து விட்டல் மகேஸ்வரி; ஆஸ்திரேலியாவில் VHP தலைவர் சுப்பிரமணியம் ராமமூர்த்தி; கனடாவைச் சேர்ந்த ரத்தன் கர்க்; சுவாமி பிரகாஷ்நந்தா, டிரினிடாட் மற்றும் டொபாகோவின் சின்மயா மிஷனின் நிறுவனர் மற்றும் ஆச்சார்யா; சுவாமி அக்ஷரானந்தா, கயானாவில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி வித்யா நிகேதன் (தனியார் இந்துக் கல்லூரி) நிறுவனர் மற்றும் முதல்வர்; இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் சதாசிவம் மற்றும் தெற்காசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த இந்துத் தலைவர்கள் விருந்தினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“