/indian-express-tamil/media/media_files/y3WSxXovwMy31JwacBNS.jpg)
நீர்யானை (பிரதிநிதித்துவ படம்)
ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர் ஞாயிற்றுக்கிழமை நீர்யானையின் தாக்குதலின் போது காயமடைந்து உயிரிழந்ததாக உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்தவர், சந்தோஷ் குமார் மஹ்தோ (54), பிறந்த நீர்யானைக் குட்டியை மாற்றுவதற்காக வெள்ளிக்கிழமை நீர்யானையின் அடைப்புக்குள் நுழைந்தார்.
தாய் நீர்யானை சந்தோஷ் குமார் மஹ்தோவை தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
"துரதிர்ஷ்டவசமாக, பராமரிப்பாளர் இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்" என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குனர் ஜப்பார் சிங் பி.டி.ஐ.,க்கு தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஜப்பார் சிங் கூறினார்.
இறந்தவரின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கேட்டபோது, ”சந்தோஷ் குமார் மஹ்தோ பணியில் இருந்தப்போது இறந்ததால் ரூ. 20 லட்சம் கருணைத் தொகை வழங்க மாநில அரசுக்கு மிருகக்காட்சிசாலை ஆணையம் முன்மொழிவு அனுப்பும் என்று கூறினார்.
மேலும், காட்டு விலங்குகள் தாக்குதலால் இறந்தவர்களுக்கு விதிமுறைப்படி ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
மருத்துவமனை செலவை மிருகக்காட்சிசாலை நிர்வாகம் கவனித்துக்கொண்டது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைக்கவும் முயற்சிப்போம்,'' என்று ஜப்பார் சிங் கூறினார்.
இதற்கிடையில், மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளர்கள் மிருகக்காட்சிசாலையின் நிர்வாகத்திற்கு எதிராக அதன் பிரதான வாயிலை மூடி போராட்டம் நடத்தினர்.
மிருகக்காட்சிசாலையில் சாதாரண மற்றும் நிரந்தரம் உட்பட சுமார் 112 பராமரிப்பாளர்கள் பணிபுரிகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.