ராஜ்யசபாவில் ரஞ்சன் கோகாய் பேச்சு; ஓய்வு பெற்ற நீதிபதியின் கருத்துகள் கட்டுப்படுத்தாது; தலைமை நீதிபதி கருத்து

முன்னாள் நீதிபதி கோகோயின் பெயரை கபில் சிபல் குறிப்பிடவில்லை என்றாலும், ராஜ்யசபாவில் அவருடைய அறிக்கையை மேற்கோள் காட்டினார்.

முன்னாள் நீதிபதி கோகோயின் பெயரை கபில் சிபல் குறிப்பிடவில்லை என்றாலும், ராஜ்யசபாவில் அவருடைய அறிக்கையை மேற்கோள் காட்டினார்.

author-image
WebDesk
New Update
Chief Justice of India DY Chandrachud, Former CJI Ranjan Gogoi, Basic structure doctrine, ராஜ்யசபாவில் ரஞ்சன் கோகாய் பேச்சு, ஓய்வு பெற்ற நீதிபதியின் கருத்துகள் கடுப்படுத்தாது, தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கருத்து, கபில் சிபல், Government of National Capital Territory of Delhi (Amendment) Bill, 2023 Rajya Sabha, TR Andhyarujina Kesavananda, Bharati case, Jurisprudential basis

ராஜ்ய சபாவில் ரஞ்சன் கோகாய் கருத்து

முன்னாள் நீதிபதி கோகோயின் பெயரை கபில் சிபல் குறிப்பிடவில்லை என்றாலும், ராஜ்யசபாவில் அவருடைய அறிக்கையை மேற்கோள் காட்டினார். அதில் உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு விவாதத்திற்குரிய நீதித்துறை அடிப்படையை கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Advertisment

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், நியமன ராஜ்யசபா எம்பியுமான ரஞ்சன் கோகாய் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டின் மீது சந்தேகங்களை எழுப்பி, செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஒரு குறிப்பு காணப்பட்டது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “உண்மையில், அடிப்படை கட்டமைப்பு கோட்பாடு சந்தேகத்திற்குரியது என்று உங்கள் மதிப்பிற்குரிய சக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.” என்று கூறினார்.

கபில் சிபலின் கருத்துகளுக்கு பதிலளித்த தலைமை நீதிபதி, “கபில் சிபல், சக ஊழியரைக் குறிப்பிடுவது என்றால், உட்கார்ந்திருக்கும் சக ஊழியரைத்தான் குறிப்பிட வேண்டும். நாங்கள் நீதிபதிகளாக இருப்பதை நிறுத்திவிட்டால், அவை கருத்துக்கள், உத்தரவுகளைக் கட்டுப்படுத்தாது.” என்று கூறினார்.

Advertisment
Advertisements

ஆனால், “நான் ஆச்சரியப்படுகிறேன்” என்று கபில் சிபல் கூறினார்.

அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உடனடியாகத் தலையிட்டு, “நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாடாளுமன்றம் விவாதிக்காது” என்று கபில் சிபலுக்கு நினைவூட்டினார். மேலும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதைப் பற்றி விவாதிக்க நீதிமன்றங்களும் விலகி இருக்க வேண்டும் என்று கூறினார்.

“கோகாய் விரும்பியதைச் சொல்ல கருத்துச் சுதந்திரம் உள்ளது” என்று துஷார் மேத்தா கூறினார். “கபில் சிபல் நேற்று நாடாளுமன்றத்தில் இல்லாததால் இங்கே நாடாளுமன்ற விவாதத்திற்கு பதிலளிக்கிறார்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார். “அடிப்படை அமைப்பு குறித்த தனது கருத்தை அவர் வெளிப்படுத்த வேண்டிய இடம் அது” என்று கூறினார்.

சட்டப்பிரிவு 370ல் செய்யப்பட்ட மாற்றங்கள் பெரும்பான்மைவாதச் செயலா என்று கேள்வி எழுப்ப முற்பட்ட கபில் சிபல், “மீண்டும் இந்தப் பெரும்பான்மை கலாச்சாரத்தின் காரணமாக நாம் அது பற்றிய விவாதத்தைத் தொடங்குகிறோம்” என்று பதிலளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “எனது பார்வை நீதிமன்றத்தின் பார்வையாக இருப்பதால் எனது பார்வை தெளிவாக உள்ளது. அதற்கு மேல் என்னால் செல்ல முடியாது. நான் நீதிமன்ற அலுவலர், நீதிமன்றத்தில் எனக்கு அந்த அரசியலமைப்பு பார்வை உள்ளது, வெளியே எனக்கு வேறு பார்வை இருக்கலாம்.” என்று கூறினார்.

ராஜ்யாபாவில் திங்கள்கிழமை பேசிய ரஞ்சன் கோகாய், 2023-ம் ஆண்டு டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா 2023-ல் எதிர்க்கட்சிகளின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டிற்கு கோகோய் எதிர்ப்பு தெரிவித்தார். “கேசவானந்த பாரதி (1973) வழக்கு தொடர்பாக இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் (தெஹ்ம்தான்) அந்தியருஜினாவின் புத்தகம் உள்ளது. புத்தகத்தைப் படித்த பிறகு… அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் கோட்பாடு விவாதத்திற்குரிய, மிகவும் விவாதத்திற்குரிய நீதித்துறை அடிப்படையைக் கொண்டுள்ளது என்பதே எனது கருத்து” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: