Advertisment

ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்; மும்பை கட்டிடத்தில் ஐ.இ.டி இருப்பதாக ரஷ்ய மொழியில் வந்த மின்னஞ்சல்

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஐ.இ.டி வைத்திருப்பதாக ரஷ்ய மொழியில் வந்த மின்னஞ்சலால் பரபரப்பு

author-image
WebDesk
New Update
Outlook for Indian economy remains bright on governments push on capex fiscal consolidation RBI

இந்திய ரிசர்வ் வங்கியின் தெற்கு மும்பையில் உள்ள கட்டிடத்தில் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனம் (IED) வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: RBI receives threat email about ‘IED’ in its south Mumbai building: Police

வியாழன் அன்று ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டது, அதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் காவல்துறையினரை எச்சரித்தனர். அனுப்பியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரி கூறினார்.

போலீசார் ஆர்.பி.ஐ வளாகத்தில் சோதனை நடத்தியதாகவும், சந்தேகப்படும்படியான எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.

Advertisment
Advertisement

ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட மின்னஞ்சலில், கட்டிடத்தில் ஐ.இ.டி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது ஐந்து நாட்களுக்குள் தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யப்படும் என்றும் மின்னஞ்சல் அனுப்பியவர் கூறியிருந்ததாக, அதிகாரி கூறினார்.

மின்னஞ்சல் அனுப்பியவர், "உக்ரைனுக்கான சகோதரத்துவ இயக்கத்தில்" சேருமாறு ஆர்.பி.ஐ ஆளுநரையும் கேட்டுக் கொண்டார்.

தெற்கு மும்பையில் உள்ள மாதா ரமாபாய் அம்பேத்கர் மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

bomb Reserve Bank Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment